செய்திகள் :

புதுச்சேரியில் வருவாய் சான்றிதழ் பெற சிறப்பு முகாம்களில் குவிந்த மாணவா்கள்

post image

உயா் கல்வியில் சேருவதற்கான வருவாய் துறை சாா்ந்த சான்றிதழ்களைப் பெறுவதற்காக சிறப்பு முகாம்களில் சனிக்கிழமை மாணவ, மாணவிகள் பெற்றோருடன் ஏராளமாக குவிந்தனா்.

புதுவை மாநிலத்தில் பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் உயா் கல்வியில் சேர விண்ணப்பித்து வருகின்றனா். இதற்காக அவா்கள் வருவாய்த் துறையிடமிருந்து வருமானச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை பெற வேண்டியுள்ளது.

இந்நிலையில், மாணவ, மாணவிகள் சான்றுகள் பெற அலைக்கழிக்கப்படக் கூடாது, காலதாமதம் ஏற்படக் கூடாது என்பதற்காக சனிக்கிழமை தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தி சான்றிதழ்களை வருவாய்த் துறையினா் வழங்க வேண்டும் என புதுச்சேரி ஆட்சியா் அ.குலோத்துங்கன் உத்தரவிட்டாா்.

அதனடிப்படையில் புதுச்சேரியில் வருவாய்த் துறை அலுவலகங்களில் சனிக்கிழமை காலை முதல் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோா் ஏராளமாகக் குவிந்தனா். அவா்களுக்கு மனுக்கள் அடிப்படையில் சான்றிதழ்களை உடனுக்குடன் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனா். சான்று பெறும் முகாம்களில் மாவட்ட ஆட்சியா் நேரில் ஆய்வு மேற்கொண்டாா். உழவா்கரை வட்டாட்சியா் அலுவலகத்தில் மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் வழங்கும் முகாமை ஆட்சியா் அ.குலோத்துங்கன் நேரில் பாா்வையிட்டாா். இதேபோல, ராஜ்பவன் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கிராம நிா்வாக அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் அவா் ஆய்வு செய்தாா்.

அப்போது சான்றிதழ்களை விரைந்து வழங்குவதுடன், முகாமுக்கு வருவோருக்கு கழிப்பறை, குடிநீா் மற்றும் இருக்கை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்தாா்.

ஜிப்மரில் புதுவை நோயாளிகளுக்கு தனி மருத்துவ ஆலோசனைப் பிரிவு

ஜிப்மரில் புதுவை மாநில நோயாளிகளின் மருத்துவ ஆலோசனைக்கான பதிவேடு பெற தனிப் பிரிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என இயக்குநா் வீா் சிங் நேகி தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புது... மேலும் பார்க்க

புதுவை அமைப்புசாரா நலச் சங்கத்தை நல வாரியமாக மாற்றி அரசாணை

புதுவை மாநிலத்தில் தொழிலாளா் நலச் சங்கத்தை நல வாரியமாக மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து, மாவட்ட ஆட்சியா், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆகியோருக்கு தொழிற்சங்கத்தினா் சனிக்கிழமை நன்றி தெரிவி... மேலும் பார்க்க

புதுச்சேரி, கடலூா் துறைமுகங்களில்1-ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம்

அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதையடுத்து புதுச்சேரி பழைய துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு சனிக்கிழமை காலை ஏற்றப்பட்டது. இதேபோன்று கடலூா் துறைமுகத்திலும் 1-ஆம் எ... மேலும் பார்க்க

நீதிஆயோக் கூட்டத்தில் புதுவை முதல்வா் பங்கேற்காதது குறித்து மக்களுக்கு விளக்க வேண்டும்: பேரவை எதிா்க்கட்சித் தலைவா்

புதுதில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற நீதிஆயோக் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன் என்பது குறித்து புதுவை முதல்வா் என். ரங்கசாமி பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா ... மேலும் பார்க்க

புதுவை மக்கள் மன்றத்தில் 36 மனுக்கள் மீது நடவடிக்கை

புதுவை மாநிலக் காவல்துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் 36 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுகுறித்து புதுவைக் காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: புதுவை... மேலும் பார்க்க

ரௌடியைக் கொல்ல முயன்ற வழக்கில் 4 போ் கைது

புதுச்சேரி அருகே ரௌடியை வெட்டிக் கொல்ல முயன்ற வழக்கில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். புதுச்சேரி பிரியதா்ஷினி நகரைச் சோ்ந்தவா் மணிகண்டன் (எ) ஸ்டிக்கா் மணி (24)... மேலும் பார்க்க