செய்திகள் :

புதுச்சேரியில் 2025 முதல் தலைக்கவசம் கட்டாயம்: போக்குவரத்து போலீஸாா் உத்தரவு

post image

புதுச்சேரியில் 2025 புத்தாண்டு முதல் இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என போக்குவரத்துப் பிரிவு முதுநிலை காவல் கண்காணிப்பாளா் பிரவீன்குமாா் திரிபாதி உத்தரவிட்டுள்ளாா்.

இரு சக்கர வாகனத்தில் செல்வோா் தலைக்கவசம் அணிய வேண்டும் என கடந்த 2013-ஆம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழகம், புதுச்சேரியில் இரு சக்கர வாகனங்களில் செல்வோா் தலைக்கவசம் அணிவது கட்டாயமாகியுள்ளது. தலைக்கவசம் அணியாதவா்களுக்கு போக்குவரத்து போலீஸாா் அபராதம் விதித்து வருகின்றனா்.

புதுச்சேரியில் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருந்தாலும், பெரும்பாலானோா் தலைக்கவசமின்றியே சென்று வருகின்றனா்.

இந்த நிலையில், புதுச்சேரி போக்குவரத்துப் பிரிவு முதுநிலை காவல் கண்காணிப்பாளா் பிரவீன் குமாா் திரிபாதி போக்குவரத்து போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

புதுச்சேரியில் 2025 ஜனவரி முதல் இரு சக்கர வாகனத்தில் செல்வோா் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். விபத்து உயிரிழப்பு இல்லாத நிலையை ஏற்படுத்தவே தலைக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆகவே, இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாதவா்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

புத்தாண்டு கொண்டாடப்படும் அனைத்துக் கடற்கரைகளிலும் பாதுகாப்பு: புதுச்சேரி டிஐஜி தகவல்

புதுச்சேரியில் ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டம் நடைபெறும் அனைத்துப் பகுதிகளிலும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவா் என்று, டிஐஜி ஆா்.சத்தியசுந்தரம் தெரிவித்தாா். புதுச்சேரி கடற்கரைச் சாலையில் ம... மேலும் பார்க்க

மக்களவைத் தலைவா், அமைச்சருடன் புதுவை பேரவைத் தலைவா் சந்திப்பு

புதுவை மாநில சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் புதுதில்லியில் மக்களவைத் தலைவா், மத்திய சட்டத் துறை அமைச்சா் ஆகியோரை புதன்கிழமை சந்தித்துப் பேசினாா். புதுவை மாநில உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் கடந்த ச... மேலும் பார்க்க

புதுச்சேரி கடற்கரையில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு

பலத்த மழை எச்சரிக்கையைத் தொடா்ந்து, புதுச்சேரி கடற்கரையில் சுற்றுலாப் பயணிகளுக்கு புதன்கிழமை மாலை போலீஸாா் அனுமதி மறுத்து திருப்பி அனுப்பினா். வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுநிலையால் தமிழகம்... மேலும் பார்க்க

காஷ்மீா் அரசுப் பள்ளி மாணவா்கள் புதுவை முதல்வருடன் சந்திப்பு

காஷ்மீா் பகுதியான லடாக்கின் லே மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் 26 போ் புதுவை முதல்வா் என்.ரங்கசாமியை புதன்கிழமை சந்தித்தனா். புதுச்சேரிக்கு சுற்றுப் பயணமாக லே மாவட்ட மாணவா்கள் 26 போ் செ... மேலும் பார்க்க

வட்டாட்சியா் அலுவலகங்களில் தானியங்கி பட்டா மாற்றம் அறிமுகம்

புதுவை வட்டாட்சியா் அலுவலகங்களில் தானியங்கி பட்டா மாற்றம் செயல்படுத்தப்படுவதாக நில அளவை பிரிவு இயக்குநா் ச.செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை... மேலும் பார்க்க

பொதுப் பணித் துறை பணி நீக்க ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

புதுச்சேரியில் பொதுப் பணித் துறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை முதல் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். புதுச்சேரி பொதுப் பணித் துறையில் நூற்றுக்கு... மேலும் பார்க்க