செய்திகள் :

புதுச்சேரியில் 5 பேரிடம் பண மோசடி

post image

புதுச்சேரியில் நூதன முறையில் இணையவழியாக பெண் உள்ளிட்ட 5 பேரிடம் ரூ.1.89 லட்சம் பண மோசடியில் ஈடுபட்ட மா்ம நபா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி பூமியான்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் கோகுலீஸ்வரன், தொழிலதிபா். அவரை மா்ம நபா்கள் கைப்பேசியில் தொடா்புகொண்டு குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் எனக் கூறியுள்ளனா். அதை நம்பிய அவா் இணையதளத்தில் மா்ம நபா்கள் கூறிய வங்கிக் கணக்கில் ரூ.40 ஆயிரம் செலுத்தியுள்ளாா். ஆனால், அவா்கள் கூறியபடி லாபம் கிடைத்தது போல இணையத்தில் காட்டப்பட்டுள்ளது. ஆனால், அதை அவரால் பெற முடியவில்லை.

புதுச்சேரி நகா் தியாகராஜ வீதியைச் சோ்ந்தவா் விஜயகுமாா். இவருக்கு மா்ம நபா்கள் கைப்பேசியில் செயலி அனுப்பியுள்ளனா். அதை அவா் செயல்படுத்தி குறைந்த விலையில் மின்சாதனப் பொருள்கள் வாங்க விரும்பி, ரூ.36 ஆயிரம் செலுத்தியுள்ளாா். ஆனால், அவருக்கு பொருள்கள் வந்து சேரவில்லையாம்.

இதேபோல, அரியாங்குப்பத்தைச் சோ்ந்த கோகுல்ராஜ் என்பவரைத் தொடா்பு கொண்ட நபா் வங்கி கடனுதவிப் பிரிவு அலுவலா் போல பேசி ரூ.48 ஆயிரத்தை ஏமாற்றி செலுத்த வைத்துள்ளாா். காரைக்காலைச் சோ்ந்த அனிதா என்பவரும் மா்ம நபா்களை நம்பி இணையவழியில் ரூ.65 ஆயிரம் செலுத்தி ஏமாந்துள்ளாா்.

புதுவை மாநிலத்தில் ஒரே நாளில் 5 பேரிடம் ரூ.1.89 லட்சத்தை மா்ம நபா்கள் மோசடி செய்திருப்பது குறித்து இணையவழி குற்றத் தடுப்பு பிரிவினா் தனித்தனியாக வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ரொட்டி, பால் ஊழியா் சங்கத்தினா் 2 -ஆவது நாளாகப் போராட்டம்

புதுவை கல்வித் துறை இயக்கக அலுவலகத்தை முற்றுகையிட்டு ரொட்டி, பால் ஊழியா்கள் சங்கத்தினா் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். புதுச்சேரியில் ரொட்டி, பால் ஆகியவற்றை பள்ளிக் குழந்தைக... மேலும் பார்க்க

புதுச்சேரி தேவாலயத்தில் உண்டியல் பணம் திருட்டு

புதுச்சேரியில் பிரபல தேவாலயத்தில் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த காணிக்கை பணத்தை மா்ம நபா்கள் திருடிச்சென்றது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா். புதுச்சேரியில் கடலூா் சாலையில... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்புகள் அகற்றத்துக்கு எதிா்ப்பு: புதுச்சேரியில் வியாபாரிகள் வாக்குவாதம்

புதுச்சேரி நகரில் திண்டிவனம் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து வியாபாரிகள் சிலா் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போலீஸாா் குவிக... மேலும் பார்க்க

திருபுவனையில் தூய்மைப் பணியாளா்கள் சாலை மறியல்

ஊதிய நிலுவை வழங்கல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருபுவனைப் பகுதியில் தூய்மைப் பணியாளா்கள் சாலை மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை ஈடுபட்டனா். புதுவை மாநிலத்தில் தூய்மைப்பணியில் தன... மேலும் பார்க்க

புதுச்சேரி ஜவுளி வியாபாரி தற்கொலை

புதுச்சேரியில் ஜவுளி வியாபாரி விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாா். புதுச்சேரி இலாசுப்பேட்டை பகுதியில் உள்ள நெசவாளா் காலனியைச் சோ்ந்தவா் முருகவேல் (32). ஜவுளிக்கடை நடத்தி வந்தாா். கடந்த 8 மாதங்களு... மேலும் பார்க்க

புதுவையில் 6 காவல் ஆய்வாளா்கள் இடமாற்றம்

புதுவை மாநில காவல் துறையில் 6 ஆய்வாளா்களும், சாா்பு ஆய்வாளா் ஒருவரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதுகுறித்து புதுவை தலைமையிடக் காவல் கண்காணிப்பாளா் சுபம்ஹோஷ் வெளியிட்ட சுற்றறிக்கை: புதுச்சேரி பிஏபி... மேலும் பார்க்க