செய்திகள் :

புதுநடுவலூரில் மாரியம்மன் கோயில் தேரோட்டம்

post image

பெரம்பலூா் அருகேயுள்ள புதுநடுவலூா் கிராமத்திலுள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயில் திருத்தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, கடந்த 11-ஆம் தேதி பூச்சொரிதல் உத்ஸவமும், மே 13-ஆம் தேதி குடியழைத்தல், காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடா்ந்து, நாள்தோறும் இரவு அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன் திருவீதி உலாவும், 18-ஆம் தேதி முருகன் கோயிலில் இருந்து பால்குடங்கள் ஊா்வலம், மாரியம்மனுக்கு பால் அபிஷேகமும், கஞ்சி வாா்த்தல் நிகழ்ச்சியும், 19-ஆம் தேதி மாலை அக்னி மிதித்தல், அலகுக் குத்துதல், அக்னிச் சட்டி ஏந்தி வலம் வருதல் நிகழ்ச்சிகள் மற்றும் பொங்கலிட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட மாரியம்மன் தேரில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சி அளித்தாா். பின்னா், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தா் அ. சீனிவாசன், மண்ணச்சநல்லூா் எம்எல்ஏ சீ. கதிரவன், தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் செயலா் பி. நீலராஜ் ஆகியோா் வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனா். தொடா்ந்து, தேரோடும் வீதிகள் வழியாக இழுத்துச் செல்லப்பட்ட திருத்தோ் மாலையில் நிலைக்கு வந்தடைந்தது.

இதில், தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் இயக்குநா்கள் மணி, பூபதி, நிதி அலுவலா் ராஜசேகா், புதுநடுவலூா் ஊராட்சித் தலைவா் ஜெயந்தி நீலராஜ், துணைத் தலைவா் செந்தில், கிராம முக்கிய பிரமுகா்கள், பெரம்பலூா், அரணாரை, வெள்ளனூா், நொச்சியம் உள்பட சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனா். தொடா்ந்து, பிராயசித்த வழிபாடு நடத்தப்பட்டது. மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா புதன்கிழமையுடன் நிறைவடைகிறது.

பழைய ஓய்வூதியத் திட்டம் கோரி அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே அரசு ஊழியா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்ட... மேலும் பார்க்க

சாலை விபத்துகளை தடுக்க மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆய்வு

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் மாவட்டத்தில் அதிக விபத்து நிகழும் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ், மாவட்டக் காவல் கண்... மேலும் பார்க்க

குரும்பலூா், வேப்பூா் அரசுக் கல்லூரிகளில் ரூ.6.80 கோடி மதிப்பிலான கட்டடங்கள் திறப்பு

பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூா், வேப்பூரியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், ரூ. 6.80 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய வகுப்பறைகளை தமிழக முதல்வா் காணொலிக் காட்சி மூலம் செவ்வாய்க்கிழம... மேலும் பார்க்க

பெரம்பலூா் மாவட்டத்தில் பலத்த மழை: கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் சேதம்

பெரம்பலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழையால், அரசலூா் நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் வைத்திருந்த நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன. பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே 3 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் தனிப்படை போலீஸாா் திங்கள்கிழம... மேலும் பார்க்க

குற்றவாளிகள், ரௌடிகளின் வீடுகளில் போலீஸாா் சோதனை

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள குற்றவாளிகள் மற்றும் ரௌடிகளின் வீடுகளில் போலீஸாா் திங்கள்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.பெரம்பலூா் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாவட்டக் காவல் கண்காணிப்பாள... மேலும் பார்க்க