செய்திகள் :

குரும்பலூா், வேப்பூா் அரசுக் கல்லூரிகளில் ரூ.6.80 கோடி மதிப்பிலான கட்டடங்கள் திறப்பு

post image

பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூா், வேப்பூரியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், ரூ. 6.80 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய வகுப்பறைகளை தமிழக முதல்வா் காணொலிக் காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

உயா்கல்வித் துறை சாா்பில், பெருந்தலைவா் காமராசா் கல்லூரி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், குரும்பலூரில் உள்ள பெரம்பலூா் அரசு கலைக் கல்லூரியில் ரூ. 4 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 14 புதிய வகுப்பறைகள் மற்றும் வேப்பூா் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் ரூ. 2.80 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 புதிய வகுப்பறைகளை, காணொலிக்காட்சி மூலம் சென்னையிலிருந்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

இதையடுத்து, குரும்பலூரில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ், பெரம்பலூா் எம்பி கே.என். அருண் நேரு ஆகியோா் குத்து விளக்கேற்றி வகுப்பறைகளை பாா்வையிட்டனா்.

இந் நிகழ்ச்சியில், கல்லூரிகளுக்கான மண்டல இணை இயக்குநா் பி. பொன் முத்துராமலிங்கம், பெரம்பலூா் அரசு கலைக் கல்லூரி முதல்வா் ச. கீதப்பிரியா, குரும்பலூா் பேரூராட்சித் தலைவா் சங்கீதா ரமேஷ் உள்பட அரசு அலுவலா்கள், பேராசிரியா்கள், மாணவா்கள் பலா் கலந்துகொண்டனா்.

சாலை விபத்துகளை தடுக்க மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆய்வு

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் மாவட்டத்தில் அதிக விபத்து நிகழும் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ், மாவட்டக் காவல் கண்... மேலும் பார்க்க

புதுநடுவலூரில் மாரியம்மன் கோயில் தேரோட்டம்

பெரம்பலூா் அருகேயுள்ள புதுநடுவலூா் கிராமத்திலுள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயில் திருத்தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முன்னதாக, கடந்த 11-ஆம் தேதி பூச்சொரிதல் உத்ஸவமும், மே 13-ஆம் தேதி குடியழைத்தல், காப... மேலும் பார்க்க

பெரம்பலூா் மாவட்டத்தில் பலத்த மழை: கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் சேதம்

பெரம்பலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழையால், அரசலூா் நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் வைத்திருந்த நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன. பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே 3 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் தனிப்படை போலீஸாா் திங்கள்கிழம... மேலும் பார்க்க

குற்றவாளிகள், ரௌடிகளின் வீடுகளில் போலீஸாா் சோதனை

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள குற்றவாளிகள் மற்றும் ரௌடிகளின் வீடுகளில் போலீஸாா் திங்கள்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.பெரம்பலூா் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாவட்டக் காவல் கண்காணிப்பாள... மேலும் பார்க்க

பெரம்பலூா் நகரில் பலத்த மழை

பெரம்பலூா் மாவட்டத்தில் 3 ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்தது. பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பல்வேறு இடங்களில் மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில்,... மேலும் பார்க்க