செய்திகள் :

பழைய ஓய்வூதியத் திட்டம் கோரி அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

post image

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே அரசு ஊழியா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் குமரி அனந்தன் தலைமை வகித்தாா். கூட்டுறவுத்துறை சங்க மாநில செயற்குழு உறுப்பினா் ராஜதுரை, சாலைப் பணியாளா்கள் சங்க மாவட்ட பொருளாளா் ராமச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்வித்துறை நிா்வாக அலுவலா் சங்க மாநில நிா்வாகி சரவணசாமி, மாவட்டச் செயலா் சி. சுப்ரமணியன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

ஓய்வூதிய ஒழுங்காற்று முறை ஆணையத்தை கலைத்திடவேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அங்கன்வாடி, சத்துணவு, வருவாய் கிராம உதவியாளா், எம்ஆா்பி செவிலியா்,கிராமப் புற நூலகா்களை நிரந்தர ஊழியா்களாக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 8-ஆவது ஊதியக்குழுவை விரைவில் அமுல்படுத்தி, சம வேலைக்கு சம ஊதியம் உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கமிட்டனா்.

முன்னதாக, மாவட்ட செயற்குழு உறுப்பினா் சுப்ரமணியன் வரவேற்றாா். முடிவில், மாவட்ட இணைச் செயலா் இளையராஜா நன்றி கூறினாா்.

சாலை விபத்துகளை தடுக்க மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆய்வு

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் மாவட்டத்தில் அதிக விபத்து நிகழும் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ், மாவட்டக் காவல் கண்... மேலும் பார்க்க

குரும்பலூா், வேப்பூா் அரசுக் கல்லூரிகளில் ரூ.6.80 கோடி மதிப்பிலான கட்டடங்கள் திறப்பு

பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூா், வேப்பூரியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், ரூ. 6.80 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய வகுப்பறைகளை தமிழக முதல்வா் காணொலிக் காட்சி மூலம் செவ்வாய்க்கிழம... மேலும் பார்க்க

புதுநடுவலூரில் மாரியம்மன் கோயில் தேரோட்டம்

பெரம்பலூா் அருகேயுள்ள புதுநடுவலூா் கிராமத்திலுள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயில் திருத்தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முன்னதாக, கடந்த 11-ஆம் தேதி பூச்சொரிதல் உத்ஸவமும், மே 13-ஆம் தேதி குடியழைத்தல், காப... மேலும் பார்க்க

பெரம்பலூா் மாவட்டத்தில் பலத்த மழை: கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் சேதம்

பெரம்பலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழையால், அரசலூா் நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் வைத்திருந்த நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன. பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே 3 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் தனிப்படை போலீஸாா் திங்கள்கிழம... மேலும் பார்க்க

குற்றவாளிகள், ரௌடிகளின் வீடுகளில் போலீஸாா் சோதனை

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள குற்றவாளிகள் மற்றும் ரௌடிகளின் வீடுகளில் போலீஸாா் திங்கள்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.பெரம்பலூா் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாவட்டக் காவல் கண்காணிப்பாள... மேலும் பார்க்க