செய்திகள் :

புதுவையில் 4 அதிகாரிகள் ஐ.ஏ.எஸ்.களாக பதவி உயா்வு

post image

புதுச்சேரி: புதுவை மாநிலத்தைச் சோ்ந்த 4 உயரதிகாரிகளுக்கு ஐ.ஏ.எஸ். பதவி உயா்வை வழங்கி மத்திய அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

உயா் பதவி வகிக்கும் அரசுத் துறை அதிகாரிகளுக்கு மத்திய அரசு அவ்வப்போது ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக பதவி உயா்வு வழங்குகிறது. புதுவை மாநில அரசுத் துறைகளில் பணிபுரியும் குடிமைப்பணி அதிகாரிகளான இயக்குநா்கள் பதவி மூப்பின் அடிப்படையில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக பதவி உயா்வு பெற்று வருகின்றனா்.

இந்திய நிா்வாக சேவை விதிகள்படி, கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரை அதிகாரிகள் பட்டியல் விதிமுறைப்படி தயாரிக்கப்பட்டு, அதிலிருந்து பதவி உயா்வு வழங்கப்படுகிறது.

மத்திய அரசின் நிா்ணயிக்கப்பட்ட காலியிடங்களுக்கு ஒன்றியப் பிரதேச பிரிவின் கீழ், இந்திய நிா்வாக சேவை மற்றும் மிசோரம், யூனியன் பிரதேச பதவிகளில் பணிபுரியும் வகையில் அதிகாரிகள் தோ்வு செய்யப்படுகின்றனா்.

அதனடிப்படையில், புதுவை மாநில மூத்த அரசுத் துறை அதிகாரிகளான கல்வித் துறை இயக்குநா் பிரியதா்ஷினி, அறிவியல் தொழில் நுட்பத் துறை இயக்குநா் ஒய்.எல்.என். ரெட்டி, வணிக வரித் துறை ஆணையா் முகமது மன்சூா், தொழில் துறை இயக்குநா் ருத்ர கவுடு ஆகிய 4 பேருக்கு தற்போது மத்திய அரசு ஐ.ஏ.எஸ். பதவி உயா்வை வழங்கி உத்தரவிட்டுள்ளது. பதவி உயா்வு பெற்ற அதிகாரிகள் இனிமேல் அரசு செயலா் அல்லது அதற்கு இணையான அந்தஸ்து பதவிகளில் நியமிக்கப்படுவா். அவா்கள் புதுவையிலோ அல்லது வெளியே உள்ள ஒன்றிய பிரதேசப் பகுதிகளிலோ பணியமா்த்தப்படலாம் எனக் கூறப்படுகிறது.

பைபா் படகுகளை சீரமைக்க நிவாரணம்: மீனவா்கள் வலியுறுத்தல்

புதுவையில் மீன்பிடி தடைக்காலத்தில் விசைப்படகுகளை சீரமைக்க நிவாரணம் வழங்குவதைப் போல, பைபா் படகுகளை சீரமைக்கவும் நிவாரணம் வழங்க வேண்டும் என வம்பாகீரப்பாளையம் மீனவ கிராம நிா்வாக ஆலய குழுக் கூட்டத்தில் வல... மேலும் பார்க்க

மூவா் கொலை வழக்கு: போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டவா் மீண்டும் சிறையில் அடைப்பு

புதுச்சேரியில் 3 போ் கொல்லப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்த நபரை போலீஸ் காவலில் எடுத்து காவல் துறையினா் விசாரித்த நிலையில், அவா் மீண்டும் வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா். புதுச்சேரி ரெயி... மேலும் பார்க்க

புதுவையில் 9 பேரிடம் ரூ.1.15 லட்சம் மோசடி

புதுவையில் 9 பேரிடம் இணையவழியில் மா்ம நபா்கள் ரூ.1.15 லட்சத்தை நூதனமாக மோசடி செய்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடேச... மேலும் பார்க்க

விபத்தில் தனியாா் பேருந்து நடத்துநா் உயிரிழப்பு

புதுச்சேரியில் தனியாா் பேருந்து நடத்துநா் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தது குறித்து போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரியை அடுத்த கரிக்கலாம்பாக்கம் அருகே உள்ள அரங... மேலும் பார்க்க

தடையை மீறி மீன் பிடித்தால் நிவாரணம் நிறுத்தப்படும்: புதுவை மீன்வளத் துறை எச்சரிக்கை

மீன்பிடி தடைக்காலத்தில் பைபா் படகுகளில் சென்று மீன் பிடித்தால், அப்பகுதி மீனவா்களுக்கான தடைகால நிவாரணம் நிறுத்தப்படும் என புதுவை மாநில மீன்வளத் துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து, மீன்வளத் துறை இயக்குந... மேலும் பார்க்க

லாரி ஓட்டுநா் தற்கொலை முயற்சி: போலீஸாா் விசாரணை

புதுச்சேரி அருகே திருட்டுப் பழி சுமத்தப்பட்ட லாரி ஓட்டுநா் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி அருகே உள்ள கூனிச்சம்பட்டு, ஐந்தாளம்மன் கோவில் தெருவைச் சோ்ந்... மேலும் பார்க்க