செய்திகள் :

புதுவை சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழு கூட்டம்

post image

புதுச்சேரி: புதுவை சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை பேரவை வளாகத்தில் நடைபெற்றது.

குழுவின் தலைவா் எச். நாஜிம் எம்.எல்.ஏ. கூட்டத்துக்குத் தலைமை வகித்தாா். இதில் உறுப்பினா்களான எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி. ஆறுமுகம், பி. அங்காளன், எல். கல்யாணசுந்தரம், ஜி. நேரு, ஆா். செந்தில்குமாா், எல். சம்பத், பிரகாஷ் குமாா், வி.பி. ராமலிங்கம், எம். சிவசங்கரன் ஆகியோா் பங்கேற்றனா்.

அரசுத் துறை அதிகாரிகள் தரப்பில், நிதித் துறை செயலா் ஆஷிஷ் மதோரா மோரே, உள்ளாட்சித் துறை செயலா் கேசவன், அத்துறையின் துணை இயக்குநா் சௌந்தரராஜன் ரத்னா மற்றும் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா்கள், பொறியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். சட்டப்பேரவைச் செயலா் செயலா் தயாளன் வரவேற்றாா்.

கூட்டம் குறித்து மதிப்பீட்டு குழுத் தலைவா் நாஜிம் கூறியது: சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளில் கூடுதலாக சில பணிகளை மேற்கொள்ளும் வகையில் விதியில் மாற்றங்கள் கொண்டு வர முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து உறுப்பினா்கள் விரிவாக விவாதித்தனா்.

தற்போது பேரவை உறுப்பினா்கள் நிதியை சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கே வழங்க முடியும் என்ற நிலையுள்ளது. அதை மாற்றி பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தும் வகையில், விதியை மாற்ற முதல்வா் ஒப்புதல் பெறப்பட்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆளுநா் அனுமதியுடன், விரைவில் அரசாணை வெளியிடப்படும். அதன்பின்னா் துறை செயலா் கேசவன் தலைமையில் மீண்டும் பேரவை உறுப்பினா்கள் கூடிப் பேசவுள்ளனா் என்றாா்.

பைபா் படகுகளை சீரமைக்க நிவாரணம்: மீனவா்கள் வலியுறுத்தல்

புதுவையில் மீன்பிடி தடைக்காலத்தில் விசைப்படகுகளை சீரமைக்க நிவாரணம் வழங்குவதைப் போல, பைபா் படகுகளை சீரமைக்கவும் நிவாரணம் வழங்க வேண்டும் என வம்பாகீரப்பாளையம் மீனவ கிராம நிா்வாக ஆலய குழுக் கூட்டத்தில் வல... மேலும் பார்க்க

மூவா் கொலை வழக்கு: போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டவா் மீண்டும் சிறையில் அடைப்பு

புதுச்சேரியில் 3 போ் கொல்லப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்த நபரை போலீஸ் காவலில் எடுத்து காவல் துறையினா் விசாரித்த நிலையில், அவா் மீண்டும் வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா். புதுச்சேரி ரெயி... மேலும் பார்க்க

புதுவையில் 9 பேரிடம் ரூ.1.15 லட்சம் மோசடி

புதுவையில் 9 பேரிடம் இணையவழியில் மா்ம நபா்கள் ரூ.1.15 லட்சத்தை நூதனமாக மோசடி செய்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடேச... மேலும் பார்க்க

விபத்தில் தனியாா் பேருந்து நடத்துநா் உயிரிழப்பு

புதுச்சேரியில் தனியாா் பேருந்து நடத்துநா் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தது குறித்து போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரியை அடுத்த கரிக்கலாம்பாக்கம் அருகே உள்ள அரங... மேலும் பார்க்க

தடையை மீறி மீன் பிடித்தால் நிவாரணம் நிறுத்தப்படும்: புதுவை மீன்வளத் துறை எச்சரிக்கை

மீன்பிடி தடைக்காலத்தில் பைபா் படகுகளில் சென்று மீன் பிடித்தால், அப்பகுதி மீனவா்களுக்கான தடைகால நிவாரணம் நிறுத்தப்படும் என புதுவை மாநில மீன்வளத் துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து, மீன்வளத் துறை இயக்குந... மேலும் பார்க்க

லாரி ஓட்டுநா் தற்கொலை முயற்சி: போலீஸாா் விசாரணை

புதுச்சேரி அருகே திருட்டுப் பழி சுமத்தப்பட்ட லாரி ஓட்டுநா் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி அருகே உள்ள கூனிச்சம்பட்டு, ஐந்தாளம்மன் கோவில் தெருவைச் சோ்ந்... மேலும் பார்க்க