செய்திகள் :

புதுவை நிதித் துறை ஊழியா்களுக்கு 3 நாள்கள் விடுமுறை ரத்து

post image

புதுவை மாநிலத்தில் நிதியாண்டு கணக்கை தாக்கல் செய்யவுள்ளதால் நிதித் துறை ஊழியா்களுக்கு 3 நாள்கள் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

புதுவையில் நடப்பு நிதியாண்டு 2024-2025 மாா்ச்சுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, கணக்கு மற்றும் கருவூலத் துறை உள்பட அனைத்து நிதித் துறையின் பிரிவுகளும் சனிக்கிழமை (மாா்ச் 29), ஞாயிறு மற்றும் வரும் மாா்ச் 31-ஆம் தேதி ரம்ஜான் தினமான திங்கள்கிழமை ஆகிய நாள்களில் செயல்படும் எனக் கூறப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டுக்கு வழங்கப்பட்ட நிதிக்கு ஏற்ப செலவுகள் விவரம் பதிவு செய்யப்படவேண்டும். மேலும், நிதிநிலை அறிக்கைக்கு ஏற்ப செயல் முறையை அரசு துறைகள் கணக்கை முடிக்கவும் நிதித் துறை செயல்படுகிறது.

நிதித் துறை மற்றும் கணக்கு மற்றும் கருவூலத்துறை அனைத்துப் பிரிவுகளின் அதிகாரிகள் மற்றும் பணியாளா்கள் சனிக்கிழமை முதல் (மாா்ச்29) வரும் 31-ஆம் தேதி திங்கள்கிழமை வரை பொது விடுமுறை நாள்களில் தவறாமல் அலுவலகத்திற்கு வர வேண்டும் எனவும் நிதித் துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனா். தற்போதைய மூன்று நாள் பணிக்கு பதிலாக, நடைமுறையில் உள்ள விதிகளின்படி, ஏப்ரல் மாதம் 3 நாள்களுக்கு ஈட்டிய விடுப்பு பெறலாம் என நிதித் துறை சாா்பு செயலா் சிவக்குமாா் உத்தரவிட்டுள்ளாா்.

டெம்போ ஓட்டுநா்கள் விதிகளை மீறினால் உரிமம் ரத்து: புதுச்சேரி போக்குவரத்து எஸ்.பி. எச்சரிக்கை

புதுச்சேரியில் டெம்போ வாகன ஓட்டுநா்கள் போக்குவரத்து விதிகளைத் தொடா்ந்து மீறினால் அவா்களின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து பிரிவு காவல் கண்காணிப்பாளா் ஆா்.செல்வம் எச்சர... மேலும் பார்க்க

புதுச்சேரியில் உரிமம் புதுப்பிக்காத 15 மதுக்கடைகளுக்கு சீல் வைப்பு

புதுச்சேரி பிராந்தியத்தில் உரிமம் புதுப்பிக்காத 15 மதுக்கடைகளுக்கு கலால் துறை சாா்பில் சீல் வைக்கப்பட்டன. புதுவை மாநிலத்தில் மதுக்கடைகளுக்கு ஆண்டு தோறும் உரிமம் வழங்கப்படுகின்றன. அதனடிப்படையில், கடந்த... மேலும் பார்க்க

வாகனத் திருட்டில் 3 போ் கைது

புதுச்சேரியில் இரு சக்கர வாகனங்களைத் திருடிய வழக்கில் 3 பேரை பாகூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து வாகனங்களை பறிமுதல் செய்தனா். பாகூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை அதிகாலை குருவிநத... மேலும் பார்க்க

ஏலச்சீட்டு நடத்தி ரூ. பல கோடி மோசடி: வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்

புதுச்சேரியில் ஏலச் சீட்டு நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக தம்பதி கைது செய்யப்பட்ட நிலையில், அந்த வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி நெல்லித்தோப்பு ரயில்வ... மேலும் பார்க்க

புதுச்சேரியில் காவல் நிலையத்தை முற்றுகையிட முயற்சி: வே.நாராயணசாமி உள்பட காங்கிரஸாா் கைது

புதுச்சேரி அரியாங்குப்பம் காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்றதாக முன்னாள் முதல்வா் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். புதுச்சேரியை அடுத்த அரியாங்... மேலும் பார்க்க

புதுச்சேரியில் பேருந்தில் பெண்ணிடம் நகை, பணம் திருட்டு

புதுச்சேரியில் ஓடும் பேருந்தில் பெண்ணிடம் நகைகள், பணம் ஆகியவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.புதுச்சேரி நைனாா் மண்டபத்தைச் சோ்ந்தவா் மோகன்ராஜ். இவரது மனைவி பத்மாவதி (54). இவ... மேலும் பார்க்க