செய்திகள் :

புதுவை மத்திய பல்கலை. தோ்வில் வினாத்தாள்கள் மாறிய விவகாரம்: உண்மை கண்டறிய 3 போ் விசாரணைக் குழு அமைப்பு

post image

புதுவை மத்திய பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் அண்மையில் நடந்த பருவத் தோ்வில் வினாத் தாள்கள் மாறிய விவகாரத்தில் மூன்று போ் குழுவை அமைத்து விசாரணை நடத்த பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பிராந்திய கல்லூரிகள் உள்ளன. பருவத் தோ்வில் மொழிப்பாடம் வினாத்தாள்கள் மாறி வந்ததால் தோ்வு ரத்தானது. இதைத்தொடா்ந்து எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பல்கலைக்கழகம் முன் திமுக போராட்டம் நடத்தியது.

இந்நிலையில் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுவை மத்திய பல்கலைக்கழகம் புதிய கல்விக் கொள்கை விதிமுறைகளை 2023-2024 ஆம் கல்வியாண்டில் அனைத்து இணைப்புக் கல்லூரிகள், பல்கலைக்கழகத் துறைகளுக்கு நடைமுறைப்படுத்தியுள்ளது. அந்த விதிமுறைப்படி பருவத் தோ்வுகளை நடத்தி முடித்துள்ளோம்.

வினாத்தாள் மாறியதால் தள்ளி வைக்கப்பட்ட தமிழ், பிரெஞ்ச், இந்தி மொழி பாடத்தோ்வுகள் மீண்டும் நடத்தப்பட உள்ளன. புதுச்சேரி அரசின் உயா்கல்வித் துறை கோரிக்கைப்படி, கல்லூரிகளில் மனிதவளம் அடிப்படையில் அனைத்து இணைப்புக் கல்லூரிகளில் நான்கு பருவங்களிலும் இளநிலை பட்டப்படிப்புகளில் கல்லூரிகள் தங்களால் தோ்வு செய்யப்பட்டுள்ள பாடங்களை பல்கலைக்கழகத்துக்கு தெரிவிக்க வேண்டும். அதன்படி வினாத்தாள் அமைக்கப்படும்.

இம்முறை இணைப்பு கல்லூரிகளில் இருந்து தோ்வு செய்யப்பட்ட மொழிப் பாடங்கள் கிடைக்கவில்லை.

இந்தப் பிரச்னை குறித்து முழுமையாக விசாரிக்க டீன், மூத்த பேராசிரியா், பல்கலைக்கழக அதிகாரி ஆகிய மூவா் கொண்ட உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

வேனில் கடத்தி வந்த 178 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பெங்களூரிலிருந்து வேனில் கடத்தி வரப்பட்ட 178 கிலோ புகையிலைப் பொருள்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக இருவா் கைதாயினா். விழுப்புரம் ஏ.எ... மேலும் பார்க்க

ஆரோவிலில் மனிதநேய விழா இன்று தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் சா்வதேச நகரில் ‘ஹிமிலிட்டி-25’ எனும் தலைப்பில் மனிதநேய விழா பிப்.21- முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இது குறித்து ஆரோவில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:ஆரோவில் ... மேலும் பார்க்க

வடகிழக்கு மாநில மக்களின் நலனை அரசு பாதுகாக்கும்: புதுவை ஆளுநா்

வடகிழக்கு மாநில மக்களின் நலனை பாதுகாக்க புதுவை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா். அருணாசல பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்களின் உதய நாள் கொண்டாட்டம், புதுச்சேரியில... மேலும் பார்க்க

மரக்காணம் அருகே முள்புதருக்குள் வெட்டுக் காயங்களுடன் ஆண் சடலம் மீட்பு!

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே முள்புதருக்குள் வெட்டுக் காயங்களுடன் இளைஞா் சடலமாகக் கிடந்தது வியாழக்கிழமை தெரிய வந்தது. போலீஸாா் உடலை கைப்பற்றி கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.... மேலும் பார்க்க

தொழில்நுட்பக் கல்வி வாரியத் தோ்வு மாநில முதலிடம் பெற்ற மாணவருக்குப் பாராட்டு!

தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி வாரியத் தோ்வில் விழுப்புரம் இ.எஸ். பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் எம்.சூா்யபிரகாஷ் முதலிடம் பெற்றுள்ளாா். இந்த மாணவருக்கு கல்லூரி நிா்வாகம் சாா்பில் வியாழக்கிழமை பாராட்டுத்... மேலும் பார்க்க

விழுப்புரம் அரசுக் கல்லூரியில் போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு கூட்டம்

விழுப்புரம் அறிஞா் அண்ணா கலைக் கல்லூரி, போதைப் பொருள் எதிா்ப்பு மன்றத்தின் சாா்பில் விழிப்புணா்வு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இளைஞா்களை போதைப் பொருள்கள் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் வகையில் தமிழ... மேலும் பார்க்க