செய்திகள் :

புத்தரின் புனித சின்னங்கள் நூற்றாண்டுக்குப் பிறகு மீட்பு- பிரதமா் மோடி

post image

கௌதம புத்தரின் எலும்பு துண்டுகள் உள்பட பல புனித நினைவுச்சின்னங்கள், 127 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பியுள்ளன என்று பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை தெரிவித்தாா்.

இந்தப் புனித நினைவுச்சின்னங்கள், 1898-இல் ஆங்கிலேயா் ஆட்சிக்காலத்தில், இந்தியா-நேபாளம் எல்லையில் உள்ள உத்தர பிரதேச மாநிலத்தின் பிப்ராஹ்வா கிராமத்தில் அமைந்திருந்த ஒரு பழைமையான புத்த ஸ்தூபியை அகழ்வாராய்ச்சி செய்தபோது கண்டுபிடிக்கப்பட்டன.

இந்தச் சின்னங்கள் வைக்கப்பட்டிருந்த பெரிய கல் சவப்பெட்டி, இப்போதும் கொல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அப்போது, எலும்பு துண்டுகள் உள்பட சில பொருள்கள் உலகின் புத்த மதத்தினரிடையே விநியோகிப்பதற்காக தாய்லாந்து அரசா் சியாமுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டன. சமீபத்தில், இந்தப் பொருள்கள் மற்றும் புத்தா் அணிந்ததாகக் கருதப்படும் சில ஆபரணங்கள் ஹாங்காங்கில் உள்ள ஒரு பிரபல ஏல நிறுவனத்தில் ஏலத்துக்கு வந்தன.

மத்திய கலாசார அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் உடனடி நடவடிக்கையால் இந்த ஏலம் தடுத்து நிறுத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து மேற்கொண்ட தொடா் முயற்சிகளின் விளைவாக, புத்தரின் இந்த அரிய நினைவுச்சின்னங்கள் தற்போது இந்தியாவுக்கு மீட்டு வரப்பட்டுள்ளன.

இது குறித்து பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘புத்தரின் புனித பிப்ராஹ்வா நினைவுச்சின்னங்கள் 127 ஆண்டுகளுக்குப் பிறகு தாயகம் திரும்பியுள்ளது. இது ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தும் விஷயமாகும்.

இந்தப் புனித நினைவுச்சின்னங்கள் புத்தருடனும் அவரது உன்னதமான போதனைகளுடனும் இந்தியாவுக்குள்ள நெருங்கிய தொடா்பை எடுத்துக்காட்டுகின்றன.

இது நமது புகழ்பெற்ற கலாசாரத்தின் பல்வேறு அம்சங்களைப் பாதுகாப்பதில் நமது உறுதிப்பாட்டையும் விளக்குகிறது’ என்று தெரிவித்தாா்.

சைபர் மோசடியால் ரூ. 1.2 லட்சம் கோடியை இந்தியர்கள் இழப்பார்களா? நீங்களும் ஜாக்கிரதையாக இருங்கள்!

கடந்தாண்டில் மட்டும் சைபர் குற்றங்கள் மற்றும் மோசடிகளால் இந்தியர்களிடம் ரூ. 22,842 கொள்ளையடிக்கப்பட்டதாக தில்லி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.சைபர் குற்றங்கள் மற்றும் மோசடி சம்பவங்கள் நாள்தோறும் நடந்... மேலும் பார்க்க

ராகுல் காந்தி கூறியது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்: தேர்தல் ஆணையம் பதில்

வாக்குகள் திருடப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியதற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலமாக பல லட்சம் வாக்காளர்களை, வாக்காள... மேலும் பார்க்க

இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்தரிக்க காங்கிரஸ் முயற்சி: ஃபட்னவீஸ்

மாலேகான் குண்டுவெடிப்புக்குப் பிறகு காங்கிரஸ் இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முயன்றதாகவும், ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்துவா நிர்வாகிகள் திட்டமிட்ட முறையில் குறிவைக்கப்பட்டதாகவும் மகாராஷ்டிர முதல... மேலும் பார்க்க

அஞ்சல் துறையில் மாற்றம்: செப்.1 முதல் பதிவு அஞ்சல் அனுப்ப முடியாது!

பதிவு அஞ்சல் முறை, விரைவு அஞ்சலுடன் இணைக்கப்படுவதாக இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை செப்.1 முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது.இந்திய அஞ்சல் சேவையின் செயல்பாட்டுக் கட்டணம் மற்றும் வி... மேலும் பார்க்க

சுதந்திர தின உரைக்கான யோசனைகளைப் பகிருங்கள்! - பிரதமர் மோடி அழைப்பு

சுதந்திர தின விழா வருவதையொட்டி, பிரதமரின் உரையில் இடம்பெற வேண்டிய விஷயங்கள் குறித்த யோசனைகளைப் பகிருமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி 79-வது ஆண்டு ச... மேலும் பார்க்க

வாக்குகளைத் தேர்தல் ஆணையம் திருடுவது தேசத்துரோகம்; 100% ஆதாரங்கள் உள்ளன! - ராகுல்

மக்களின் வாக்குகளை தேர்தல் ஆணையம் திருடுகிறது என்பதற்கான 100% ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலமாக ப... மேலும் பார்க்க