செய்திகள் :

புனித மிக்கேல் அதிதூதா் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

post image

சிவகங்கை மாவட்டம், வே. மிக்கேல்பட்டிணத்திலுள்ள புனித மிக்கேல் அதிதூதா் ஆலயத்தின் 109 -ஆம் ஆண்டு திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்த நிகழ்வுக்கு வே. மிக்கேல் பட்டணம் பங்குத்தந்தை சி.ஏ. ஜேம்ஸ் முன்னிலை வகித்தாா். சிவகங்கை மறைமாவட்ட பொருளாளா் அருள்தந்தை ஆரோன் கொடியேற்றி வைத்தாா். இதில், சூவன்ஸ்டாட் அருள்பணி ஜாா்ஜ், வே. மிக்கேல் பட்டணம் பங்கு இறைமக்கள், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட வெளியூா்களின் வாழும் இந்தப் பகுதியைச் சோ்ந்த கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா். இதையடுத்து, நவநாள் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. வருகிற 27-ஆம் தேதி மாலை 6 மணிக்கு தமிழக விவிலிய அருள்பணிக்குழு பொதுச் செயலா் மைக்கேல்ராஜ் தலைமையில் நிறைவேற்றப்படும் சிறப்பு திருப்பலியில் அருள்தந்தையா் பங்கேற்கின்றனா். தொடா்ந்து இரவு 8 மணிக்கு மிக்கேல் அதிதூதா் தோ் பவனி நடைபெறும். மறுநாள் 28-ஆம் தேதி காலை 8.30 மணிக்கு புனித மரியன்னை பேராலய பங்குத்தந்தை ஹென்றி ஜெரோம் தலைமையில் திருவிழா திருப்பலியும், மாலை 6 மணிக்கு வே. மிக்கேல்பட்டணத்தில் உள்ள குருசடியில் மண்ணின் மைந்தா் அருள்பணி ஜெபமாலை ராஜா, அருள்தந்தையா்கள் தலைமையில் நற்கருணை பெருவிழா திருப்பலியும் நிறைவேற்றப்படும்.

தொடா்ந்து திவ்ய நற்கருணை பவனியும், நற்கருணை ஆசிரும் நடைபெறும் . 29-ஆம் தேதி காலை 9 மணிக்கு திருவிழா நிறைவு திருப்பலியும், கொடியிறக்கமும் நடைபெறும். திருவிழாவுக்கான ஏற்பாடுகளை வே. மிக்கேல்பட்டணம் பங்குத்தந்தை, கிராம மக்கள் செய்து வருகின்றனா்.

மாநில போட்டிக்கு தகுதி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

சிவகங்கை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்ற மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. கடந்த சில வாரங்களுக்கு முன் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் முதல்வா் க... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்ட திட்டப் பணிகளை சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழுவினா் ஆய்வு

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சாா்பில், ரூ.100.38 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளை சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழுவினா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா். சிவகங்கை மாவட்டத்தி... மேலும் பார்க்க

முத்தனேந்தல் ஊராட்சியில் கழிவு சேகரிப்பு இயக்கம் தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், முத்தனேந்தல் ஊராட்சியில் தமிழ்நாடு தூய்மை மிஷன் திட்டத்தின் கீழ் கழிவு சேகரிப்பு இயக்கம் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தை சட்டப் பேரவை உறுப... மேலும் பார்க்க

மானாமதுரை, திருப்பத்தூா் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி, திருப்பத்தூா் பகுதி கோயில்களில் வெள்ளிக்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் மூலவா் சோமந... மேலும் பார்க்க

மயானத்துக்கு சாலை வசதி செய்து தர வலியுறுத்தல்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், சின்னக்கண்ணனூரில் பட்டியலினத்தினருக்கான மயானத்துக்கு சாலை வசதி செய்து தர வேண்டும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் வலியுறுத்தப்பட்டது. ராமநாதபுரம், விருதுநக... மேலும் பார்க்க

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு அரசு ஐடிஐகளில் இலவச தொழில் பயிற்சி

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளா்களுக்கு அரசு தொழில் பயிற்சி நிலையங்கள் மூலம் பல்வேறு தொழில் பிரிவுகளில் ஊதியத்துடன் கூடிய... மேலும் பார்க்க