செய்திகள் :

புனே: 82 வயது முதியவரிடம் டிஜிட்டல் கைது மோசடி; ரூ. 1 கோடி பறிபோனதால் அதிர்ச்சியில் உயிரிழந்த சோகம்

post image

மும்பை மற்றும் புனே போன்ற நகரங்களில் இணையதளக் குற்றவாளிகள் டிஜிட்டல் முறையில் கைது செய்து பணம் பறிப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

முதியவர்கள் இந்த மோசடியில் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இதனால் அவர்கள் தங்களது கடைசி காலத்திற்காகச் சேமித்து வைத்ததை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் மும்பையைச் சேர்ந்த 78 வயது முதியவரை டிஜிட்டல் முறையில் கைது செய்து ரூ.58 கோடியைப் பறித்தனர். தற்போது புனேயைச் சேர்ந்த 82 வயது முதியவரை டிஜிட்டல் முறையில் கைது செய்து ரூ.1.19 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளனர்.

தங்களை மும்பை சைபர் பிரிவு போலீஸார் என்றும், சி.பி.ஐ அதிகாரிகள் என்றும் கூறி இந்த மோசடியைச் செய்துள்ளனர். புனேயைச் சேர்ந்த 82 வயது முதியவர் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டு தனது மனைவியுடன் வசித்து வந்தார். அவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள். அவர்கள் மூன்று பேரும் திருமணமாகி வெளிநாட்டில் வசிக்கின்றனர்.

டிஜிட்டல் குற்றவாளிகள்
டிஜிட்டல் குற்றவாளிகள்

மர்ம நபர்கள் போன் செய்து மூன்று மகள்கள் மீதும் பண மோசடி வழக்குப்பதிவு செய்யப்படும் என்று கூறி முதியவரை 3 நாட்கள் சைபர் கிரிமினல்கள் டிஜிட்டல் முறையில் கைது செய்து வைத்திருந்தனர்.

முதன் முதலில் ஆகஸ்ட் 16ம் தேதி மர்ம நபர் போன் செய்து, தான் மும்பை என்கவுண்டர் பிரிவு போலீஸ் அதிகாரி என்று கூறி பேசினார். அவர் முதியவரிடம் உங்களது வங்கிக் கணக்கும், ஆதார் கார்டும் தனியார் ஏர்லைன்ஸ் பண மோசடிக்குப் பயன்படுத்தப்பட்டு இருப்பதாகத் தெரிவித்தார்.

மற்றொருவர் போன் செய்து டெல்லியிலிருந்து ஐ.பி.எஸ் அதிகாரி பேசுவதாகவும், கணவன், மனைவி இரண்டு பேரும் பணமோசடியில் ஈடுபட்டு இருப்பதால் உங்களை டிஜிட்டலில் கைது செய்து இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதற்காக போன் வீடியோவை ஆன் செய்து வைக்கும்படி கேட்டுக்கொண்டார்.

போன் ஆனில் இருக்கும்போது முதியவரிடம் அவரது வங்கிக்கணக்கு விபரங்களைக் கேட்டு தெரிந்து கொண்டனர். அதன் மூலம் அவரிடமிருந்த ரூ.1.19 கோடி பணத்தை 5 வங்கிக்கணக்குகளுக்கு மாற்றும்படி கேட்டுக்கொண்டனர்.

முதியவர் தன்னிடமிருந்த பணம், தனது மகள்கள் அனுப்பிய பணம் என அனைத்தையும் அவர்கள் சொன்ன வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைத்தனர். திடீரென அவர்கள் போன் இணைப்பைத் துண்டித்துக்கொண்டனர்.

அதன் பிறகுதான் தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்தார். இதனால் அதிர்ச்சியில் அப்படியே மயங்கி விழுந்தார். அவரை அவரது 80 வயது மனைவி மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் அவர் இறந்துவிட்டார்.

அதனைத்தொடர்ந்தே அவரின் 80 வயது மனைவி இது தொடர்பாக போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

டிஜிட்டல் கைது: "மகனின் திருமணம் நல்லபடியாக நடக்கணும்னுதான்" - பெங்களூரு பெண்ணிடம் ரூ.32 கோடி மோசடி

நாடு முழுவதும் பெண்கள் மற்றும் முதியவர்களை ஆன்லைனில் டிஜிட்டல் முறையில் கைது செய்து பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன. கைது செய்ய வீட்டிற்கு போலீஸாரை அனுப்புவோம் என்று பெண்களை மிர... மேலும் பார்க்க

சேலம்: திருமணம் தாண்டிய உறவு விவகாரத்தில் கொலை - 25 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள உம்பிளிக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நல்லதம்பி(60). கடந்த 2000-ம் ஆண்டு நல்லதம்பிக்கு 35 வயது இருந்தபோது, உம்பிளிக்கம்பட்டி பகுதியில் வசித்து வந்துள்ளார். அப்... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: பட்டியல் சமூக மாணவரை தாக்கிய மாற்று சமூக மாணவர்கள் - அரசு விடுதியில் அரங்கேறிய அவலம்

ராமநாதபுரம் அம்மா பூங்கா பகுதியில் மாணவர்களுக்கான அரசு சமூக விடுதி இயங்கி வருகிறது. இந்த விடுதியில் பல்வேறு சமுதாயத்தினை சேர்ந்த சுமார் 50 மாணவர்கள் தங்கியிருந்து அருகில் உள்ள பள்ளிகளில் பயின்று வருகி... மேலும் பார்க்க

``டெல்லியில் நடந்த தற்கொலைப்படைத் தாக்குதல்'' - NIA விசாரணை என்ன சொல்கிறது?

டெல்லியில் கடந்த வாரம் செங்கோட்டை அருகில் நடந்த கார் குண்டு வெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயம் அடைந்தனர். இக்குண்டு வெடிப்பில், வெடிகுண்டு இருந்த காரை ஓட்டி வந்த டாக்டர் உமர் உல் நப... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: ``திருமணம் நடைபெற 16 நாள் குழந்தையை பலியிட்ட 4 பெண்கள்'' - பெற்றோர்கள் அதிர்ச்சி

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்தவர் பூனம்ராம். இவரது மனைவி சுமன். சுமனுக்கு அங்குள்ள மகாத்மா காந்தி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்திருந்தது.ஆனால், பூனத்தின் சகோதரிகள் ரமேஷ்வரி, மம்தா, கீதா, மஞ்சு... மேலும் பார்க்க

காங்கேயம்: சமூகநீதி விடுதியில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை; போலி வார்டன் போக்சோவில் கைது

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாணவர், மாணவியர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்குப் பின்புறம் தமிழக அரசின்... மேலும் பார்க்க