செய்திகள் :

பும்ரா இல்லாதது வங்கதேச அணிக்கு கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பு: முன்னாள் வீரர்

post image

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஜஸ்பிரித் பும்ரா இல்லாதது வங்கதேச அணிக்கு கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பு என அந்த அணியின் முன்னாள் வீரர் இம்ருல் கேயிஸ் தெரிவித்துள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நாளை மறுநாள் (பிப்ரவரி 19) தொடங்குகிறது. கராச்சியில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்திய அணி பிப்ரவரி 20 ஆம் தேதி அதன் முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்த்து விளையாடுகிறது.

இதையும் படிக்க: சாம்பியன்ஸ் டிராபி: இந்திய கொடியை பாகிஸ்தான் புறக்கணித்ததா?

நல்ல வாய்ப்பு

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவுக்கு எதிராக தனது முதல் போட்டியில் வங்கதேசம் விளையாடவுள்ள நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஜஸ்பிரித் பும்ரா இல்லாதது வங்கதேச அணிக்கு கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பு என அந்த அணியின் முன்னாள் வீரர் இம்ருல் கேயிஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணி மிகவும் சிறந்த அணி. இந்தியாவுக்கு எதிராக வங்கதேசம் அதன் முதல் போட்டியில் விளையாடவுள்ளது. இந்திய அணியில் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டுமே வலுவாக உள்ளது. ஆனால், இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா இல்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணிக்காக பும்ரா என்ன செய்திருக்கிறார் என்பதைப் பார்த்திருக்கிறோம்.

இதையும் படிக்க: சாம்பியன்ஸ் டிராபி தொடர்: பாகிஸ்தான் வந்தடைந்த ஆஸ்திரேலிய அணி!

இந்திய அணியில் அவர் இல்லாதது இந்திய பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்த வங்கதேசத்துக்கு கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பு. முகமது ஷமி அணியில் இணைந்துள்ளது மிகப் பெரிய விஷயம். அவர் உடல் தகுதியில் சற்று தடுமாறினாலும், முழு உடல் தகுதியுடன் பந்துவீசினால் வங்கதேசத்துக்கு அவர் பெரும் அச்சுறுத்தலாக இருப்பார் என்றார்.

பாகிஸ்தானை பழிதீா்க்கும் முனைப்பில் இந்தியா இன்று மோதல்

துபை : கடந்த 2017 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை இறுதி ஆட்டத்தில் 180 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வி கண்டதற்கு பதிலடி தரும் முனைப்பில் இந்திய அணி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் ... மேலும் பார்க்க

சேஸிங்கில் புதிய வரலாறு..! 352 ரன்கள் இலக்கை விரட்டிப் பிடித்து ஆஸ்திரேலியா அபாரம்!

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 352 ரன்கள் இலக்கை விரட்டிப் பிடித்து ஆஸ்திரேலிய அணி புதிய வரலாறு படைத்துள்ளது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் டாப் 5 தனிநபர் அதிகபட்ச ஸ்கோர்கள்!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் வரலாற்றில் தனிநபராக அதிக ரன்கள் குவித்து இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் சாதனை படைத்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றையப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கி... மேலும் பார்க்க

முதல் டி20: மழையால் ஓவர்கள் குறைப்பு; அயர்லாந்துக்கு 78 ரன்கள் இலக்கு!

அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 5 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்கள் எடுத்துள்ளது.அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் இன்று தொடங்கியது. ஹராரே ஸ்போர்ட்ஸ்... மேலும் பார்க்க

மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நேரலை!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியைக் காண மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் துபைய... மேலும் பார்க்க

துபையில் வெற்றி பெற எவ்வளவு ரன்கள் எடுக்க வேண்டும்? ஷுப்மன் கில் பதில்!

துபையில் விளையாடும் போட்டிகளில் வெற்றி பெற ஒரு அணி எவ்வளவு ரன்கள் எடுக்க வேண்டும் என இந்திய அணியின் துணைக் கேப்டன் ஷுப்மன் கில் பேசியுள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அண்மையில் தொடங்கியது. அனைத்த... மேலும் பார்க்க