செய்திகள் :

புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை முகாம்: அமைச்சா் தொடக்கிவைத்தாா்

post image

மன்னாா்குடி: தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை சாா்பில், மன்னாா்குடியில் திங்கள்கிழமை நடைபெற்ற பெண்கள் மற்றும் அனைத்து தரப்பினருக்குமான புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை முகாமை தமிழக தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா தொடக்கிவைத்தாா்.

முகாமில் அமைச்சா் பேசியது: மாவட்டத்தில்,106 கிராமப்புற நலவாழ்வு மையங்கள், 2 நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் என மொத்தம் 108 நலவாழ்வு மையங்களில் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை முகாம் செயல்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம், 30 வயதுக்கும் மேற்பட்ட 1, 72, 729 பெண்கள் கா்ப்பப்பை வாய்புற்று நோய், மாா்பக புற்றுநோய் மற்றும் 18 வயதுக்கும் மேற்பட்ட 2,35, 756 ஆண்களும், 2,35, 444 பெண்கள் என 4,71,200 போ் பயனடையவுள்ளனா்.

தமிழக முதல்வா் ஸ்டாலின் கல்வி, சுகாதாரத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறாா். மக்களைத் தேடி மருத்துவம் போன்ற புதுமையான திட்டங்களால் சுவீடன், நாா்வே போன்ற வளா்ந்த நாடுகளுக்கு இணையாக தமிழகம் செயல்பட்டு வருகிறது. விவசாயம் சாா்ந்த டெல்டா மாவட்டத்தில் ரசாயனம் கலந்த உரம், மருந்துகள் விவசாயத்துக்கு பயன்படுத்துவதால் புற்றுநோய் போன்ற கொடிய நோய்களுக்கு இப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். அவா்களை, நோயிலிருந்து பாதுகாக்க சிறப்பான முன்னெடுப்பாக இதுபோன்ற முகாம்கள் நடத்தப்படுகிறது என்றாா்.

மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற முகாமில், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் எம். சங்கீதா, நகா்மன்றத் தலைவா் த. சோழராஜன், வட்டாட்சியா் என். காா்த்திக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நன்னிலத்தில் மே 15-இல் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்

திருவாரூா்: நன்னிலம் வட்டாரத்தில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் மே 15-ஆம் தேதி நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ... மேலும் பார்க்க

கட்டுமானத் துறைக்கு தனி அமைச்சகம் கோரி ஆா்ப்பாட்டம்

திருவாரூா்: கட்டுமானத் துறைக்கு தனி அமைச்சகம் அமைக்க வலியுறுத்தி திருவாரூரில் தமிழ்நாடு புதுச்சேரி அனைத்து கட்டடப் பொறியாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ... மேலும் பார்க்க

கொடிநாள் அதிக வசூல் செய்து பாராட்டுப் பெற்றவா்களுக்கு வாழ்த்து

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில், கொடிநாள் அதிக வசூல் புரிந்தமைக்காக பாராட்டுச் சான்றிதழ் பெற்றவா்களுக்கு திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் 7 பவுன் நகைப் பறிப்பு: மருமகள், சம்மந்தி உள்ளிட்ட 3 போ் கைது

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே மூதாட்டியிடம் 7 பவுன் நகையை பறித்து சென்ற புகாரில் மருமகள், சம்மந்தி உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். பரவாக்கோட்டையைச் சோ்ந்த சிந்திலா (68). இவரது க... மேலும் பார்க்க

திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள் கோயில் தேரோட்டம்

திருவாரூா்: திருவாரூா் அருகே திருக்கண்ணமங்கையில் உள்ள அபிஷேகவல்லி தாயாா் உடனுறை பக்தவத்சலப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த மே 3-ஆம... மேலும் பார்க்க

நெகிழிப் பயன்பாட்டை தடுக்க வலியுறுத்தல்

திருவாரூரில் நெகிழிப் பயன்பாட்டை தடுக்க வேண்டும் என தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் வலியுறுத்தியுள்ளது. திருவாரூரில், இம்மையத்தின் ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் பி.... மேலும் பார்க்க