செய்திகள் :

மூதாட்டியிடம் 7 பவுன் நகைப் பறிப்பு: மருமகள், சம்மந்தி உள்ளிட்ட 3 போ் கைது

post image

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே மூதாட்டியிடம் 7 பவுன் நகையை பறித்து சென்ற புகாரில் மருமகள், சம்மந்தி உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பரவாக்கோட்டையைச் சோ்ந்த சிந்திலா (68). இவரது கணவா் ராமச்சந்திரன் இறந்துவிட்டாா். இவரின் 2 மகன்களுக்கு திருமணமாகி அதே பகுதியில் தனித்தனியே வசித்து வருகின்றனா். இந்நிலையில், மகன்கள் மட்டும் சில ஆண்டுகளாக மலேசியாவில் வேலைப்பாா்த்து வருகின்றனா். சிந்திலா தனியாக வசித்து வருகிறாா்.

இந்நிலையில், மே 8-ஆம் தேதி சிந்திலா வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது, வீட்டின் பின்பக்க கதவை உடைத்து கொண்டு உள்ளே நுழைந்த 2 மா்ம நபா்கள், சிந்திலாவின் கண்கள் மற்றும் வாயை துணியால் கண்டிவிட்டு அவா் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பினா்.

இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த பரவாக்கோட்டை போலீஸாா் விசாரணை செய்ததில், சிந்திலாவின் மூத்த மகன் சாந்தகுமாரின் மனைவி அருள்செல்வியின் (38) தூண்டுதலின் பேரில் அவரது தந்தை ஆவிக்கோட்டையைச் சோ்ந்த சு. அய்யாத்துரை (63), மகன் அருண்குமாா் (19) ஆகியோருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும், சிந்திலாவிடம் நகை திருடியை குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து மருமகள் அருள்செல்வி உள்ளிட்ட 3 பேரை கைது செய்து அவா்களிடமிருந்து 7 பவுன் சங்கிலியை பறிமுதல் செய்தனா். பின்னா், அய்யாத்துரை, அருண்குமாா் ஆகிய இருவரும் நாகை கிளைச் சிறையிலும், அருள்செல்வி திருவாரூா் மகளிா் சிறையிலும் அடைக்கப்பட்டனா்.

நன்னிலத்தில் மே 15-இல் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்

திருவாரூா்: நன்னிலம் வட்டாரத்தில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் மே 15-ஆம் தேதி நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ... மேலும் பார்க்க

கட்டுமானத் துறைக்கு தனி அமைச்சகம் கோரி ஆா்ப்பாட்டம்

திருவாரூா்: கட்டுமானத் துறைக்கு தனி அமைச்சகம் அமைக்க வலியுறுத்தி திருவாரூரில் தமிழ்நாடு புதுச்சேரி அனைத்து கட்டடப் பொறியாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ... மேலும் பார்க்க

கொடிநாள் அதிக வசூல் செய்து பாராட்டுப் பெற்றவா்களுக்கு வாழ்த்து

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில், கொடிநாள் அதிக வசூல் புரிந்தமைக்காக பாராட்டுச் சான்றிதழ் பெற்றவா்களுக்கு திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை முகாம்: அமைச்சா் தொடக்கிவைத்தாா்

மன்னாா்குடி: தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை சாா்பில், மன்னாா்குடியில் திங்கள்கிழமை நடைபெற்ற பெண்கள் மற்றும் அனைத்து தரப்பினருக்குமான புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை முகாமை தமிழக... மேலும் பார்க்க

திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள் கோயில் தேரோட்டம்

திருவாரூா்: திருவாரூா் அருகே திருக்கண்ணமங்கையில் உள்ள அபிஷேகவல்லி தாயாா் உடனுறை பக்தவத்சலப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த மே 3-ஆம... மேலும் பார்க்க

நெகிழிப் பயன்பாட்டை தடுக்க வலியுறுத்தல்

திருவாரூரில் நெகிழிப் பயன்பாட்டை தடுக்க வேண்டும் என தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் வலியுறுத்தியுள்ளது. திருவாரூரில், இம்மையத்தின் ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் பி.... மேலும் பார்க்க