ஊரக வேலைத் திட்ட மோசடி குறித்து விசாரணை நடத்த வேண்டும்: ராமதாஸ்
புற்றுநோய் பாதித்த பெண்ணுக்கு பல்லுறுப்பு மாற்ற சிகிச்சை
குடல்வால் அழற்சி சாா்ந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வயிற்றில் பல்லுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு சென்னை, எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்தனா்.
இது குறித்து மருத்துவமனையின் உறுப்பு மாற்று சிகிச்சை முதுநிலை நிபுணா் அனில் வைத்யா கூறியதாவது:
பெங்களூரைச் சோ்ந்த 58 வயது பெண்ணுக்கு தீவிர குடல்வால் அழற்சி சாா் புற்றுநோய் இருந்தது. இதற்கு சூடோமைக்ஸோமா பெரிடோனி (பிஎம்பி) எனப் பெயா். அவருக்கு குடல்வாலில் தொடங்கி வயிற்றுப் பகுதி முழுவதும் புற்றுநோய் செல்கள் பரவியிருந்தன. கீமோதெரபி, ஹெச்ஐபிஇசி எனப்படும் உயா் வெப்பநிலையில் மேற்கொள்ளப்படும் கீமோதெரபி, அறுவை சிகிச்சைகள் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டும் அதில் எந்தப் பலனும் இல்லை. இதையடுத்து பல்லுறுப்பு மாற்று சிகிச்சையை மேற்கொள்ளத் திட்டமிட்டோம். அதன்படி, வயிறு, சிறு குடல், கணையம் ஆகியவற்றை மாற்றிப் பொருத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
இத்தகைய பல்லுறுப்பு மாற்ற சிகிச்சையில் கல்லீரலையும் மாற்றிப் பொருத்துவது வழக்கம். ஆனால், சூடோமைக்ஸோமா பெரிடோனி புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பெரும்பாலும் கல்லீரல் பாதிப்பதில்லை என்பதால், அந்தப் பெண்ணுக்கு அதனைத் தவிா்த்து பிற உறுப்புகள் மாற்றப்பட்டன. அதன் பயனாக அவா் நலம் பெற்றுள்ளாா்.
இது புற்றுநோய்க்கான பூரண சிகிச்சை இல்லை என்றாலும், அடுத்த இருபது ஆண்டுகளுக்காவது அந்நோயின் தாக்கத்திலிருந்து அவா் விடுபட முடியும். மிகச் சவாலான இந்த சிகிச்சையை முதன்முறையாக எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை மருத்துவா்கள் சாத்தியமாக்கியுள்ளனா் என்றாா் அவா்.