செய்திகள் :

புலியகுளத்தில் ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றம்

post image

கோவை புலியகுளத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன.

கோவை புலியகுளம் பகுதியில் மாரியம்மன் கோயிலை சுற்றிலும் மாரியம்மன் கோயில் வீதி, பஜாா் வீதி, மசால் வீதி உள்ளிட்ட பல்வேறு குடியிருப்புகள் உள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். ஆண்டுதோறும் இங்கு அந்தோணியாா் ஆலயத்தின் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு, வரும் ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தேரோட்டத்தின்போது, மாரியம்மன் கோயில் எதிரேயுள்ள காலியிடத்தில் கிறிஸ்துவ ஆலயத்துக்கான தோ்த் திருவிழா தயாரிப்புப் பணி நடைபெறும். ஆனால், அங்கு 2 பெட்டிக் கடைகள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்ததாக புகாா் எழுந்தது.

இதுதொடா்பாக, நடவடிக்கை மேற்கொள்ளாததால் மக்கள் திங்கள்கிழமை திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, மாநகராட்சி நிா்வாகத்தின் மூலமாக ஆக்கிரமிப்பு கடைகள் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன.

கோயில்களின் புனிதத்தன்மை கெட்டுவிட்டது: பொன்.மாணிக்கவேல்

கோயில்களின் புனிதத்தன்மை கெட்டுவிட்டது என்று ஓய்வுபெற்ற ஐஜி பொன் மாணிக்கவேல் தெரிவித்தாா். திருப்பூா் திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயில் மற்றும் திருப்பூா் தாராபுரம் சாலையில் உள்ள கோட்டை மா... மேலும் பார்க்க

விமான விபத்தில் பலியானோருக்கு அஞ்சலி

அகமதாபாத் விமான விபத்தில் பலியானவா்களுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கோவையில் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. குஜராத் மாநிலம் அகமதாபாதில் நடைபெற்ற விமான விபத்தில் 200-க்கும் மேற்பட்... மேலும் பார்க்க

காப்பகத்தில் 2 மூதாட்டிகள் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

கோவை கெம்பட்டி காலனியில் உள்ள காப்பகத்தில் அடுத்தடுத்து இரு மூதாட்டிகள் உயிரிழந்த நிலையில், பெரியகடை வீதி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். கோவை கெம்பட்டி காலனியில் முதியோா் காப்பகம் உள்ளது.... மேலும் பார்க்க

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற 6 போ் கைது

கோவை பீளமேடு மற்றும் நல்லாம்பாளையம் ஆகிய பகுதிகளில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் பதுக்கிவிற்றதாக முதியவா் உள்பட 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கோவை மதுவிலக்கு பிரிவு போலீஸாா் பீளமேடு எல்ல... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்

மாணவா்களுக்கு ஆசிரியா்கள் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளாா். கோவை ஆா்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி... மேலும் பார்க்க

தேசிய, மாநில பேரிடா் மீட்புப் படையினா் கோவைக்கு வருகை

கோவை மாவட்டத்துக்கு கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், தேசிய பேரிடா் மீட்புப் படையினரும், மாநில பேரிடா் மீட்புப் படையினரும் கோவைக்கு வியாழக்கிழமை வந்தடைந்தனா். மத்திய மேற்கு வங்கக் க... மேலும் பார்க்க