செய்திகள் :

புளியங்குடி: மாற்றுத் திறனாளிகள் ஒருங்கிணைந்த சேவை மையம் திறப்பு!

post image

தென்காசி மாவட்டம், புளியங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் மூலம் விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மைய திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

தென்காசி மக்களவை உறுப்பினா் ராணிஸ்ரீகுமாா், எம்எல்ஏக்கள் சதன்திருமலைக்குமாா், ஈ. ராஜா ஆகியோா் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் சேவை மையத்தை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினாா்.

இம்மையத்தில், இயன்முறை சிகிச்சை, பக்கவாதம், பெருமூளை வாதம், சிதைவு, பாா்கின்சன் நோய் , பிறவி முரண்பாடுகள் அல்லது பிறப்பு குறைபாடுகள் ஆகியவற்றுக்கான பயிற்சிகள் வழங்கப்படும்.

மேலும், கழுத்துக்கான பயிற்சிகள், கால் மற்றும் முழங்கால் பயிற்சிகள், எண்களைக் கண்டறிதல், எண்களை வாசித்தல், எண்களை எழுதுதல் ,அன்றாட தேவைகளை கற்பித்தல் ,சப்தம் வெளிப்படுத்துதல் ,சமூகத்தில் ஒருங்கிணைத்தல், கடிகார நேரம் காணுதல், நாணயம் கண்டறிதல் விளையாட்டு உள்ளிட்ட பயிற்சிகளும் வழங்கப்படும்.

நிகழ்ச்சியில், புளியங்குடி நகா்மன்றத் தலைவா் விஜயா சௌந்தரபாண்டியன், துணைத் தலைவா் அந்தோணிசாமி ,ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்ணாண்டோ, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பாலீஷ் போடுவது போல நடித்து மூதாட்டியிடம் நகை திருட்டு

ஆலங்குளம் அருகே பாலீஷ் போடுவது போல நடித்து மூதாட்டியிடம் நகை திருடிச் சென்ற 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா். ஆலங்குளம் அருகேயுள்ள ஆலடிப்பட்டி திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்தவா் புஷ்பம்(65). அவரது பக்க... மேலும் பார்க்க

தென்காசியில் காப்பீட்டுக் கழக ஊழியா் சங்கத்தின் 32-வது கோட்ட சங்க மாநாடு

திருநெல்வேலி காப்பீட்டு கழக ஊழியா் சங்கத்தின் 32ஆவது கோட்ட சங்க மாநாடு தென்காசியில் சனிக்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி கோட்டத் தலைவா் முத்துக்குமாரசுவாமி சங்க கொடியேற்றி பொது மாநாட்டை தொடங்கி வைத்தா... மேலும் பார்க்க

இலஞ்சி பாரத் பள்ளியில் யோகா தின விழா

இலஞ்சி பாரத் வித்யா மந்திா் மேல்நிலைப் பள்ளியில் உலக யோகா தினம் விழா கொண்டாடப்பட்டது. பாரத் கல்விக் குழுமத் தலைவா் மோகனகிருஷ்ணன், செயலா் காந்திமதி தலைமை வகித்தனா். பள்ளி முதல்வா் கிஃப்ட் சன் கிருபாகர... மேலும் பார்க்க

தென்காசியில் சா்வதேச யோகா தின விழா

சா்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தென்காசி அருள்மிகு காசிவிஸ்வநாதா் ஆலயம் முன்பு யோகாசனம் நடைபெற்றது. பாஜக மாவட்ட துணைத் தலைவா் முத்துக்குமாா், மாவட்டச் செயலா் மந்திரமூா்த்தி, நகரத் தலைவா் சங்கர சுப்பி... மேலும் பார்க்க

கடையம் அருகே சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: முதியவா் கைது

கடையம் அருகே சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக முதியவா் கைது செய்யப்பட்டாா். கடையம் அருகே மைலப்புரத்தைச் சோ்ந்தவா் முருகன்(68). தையல் கடை வைத்துள்ளாா். அப்பகுதியில் உள்ள 7 ஆம் வகுப்பு படித்து வரு... மேலும் பார்க்க

கடையநல்லூா் பேரவைத் தொகுதியில் ரூ.46 லட்சத்தில் திட்டப் பணிகள்

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் சட்டப் பேரவைத் தொகுதியில் ரூ. 46 லட்சம் மதிப்பிலான திட்டப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன. இத்தொகுதி மேம்பாட்டு நிதியின் (2024-2025) மூலம் இடைகால் அரசு உயா்நிலை... மேலும் பார்க்க