கடையநல்லூா் பேரவைத் தொகுதியில் ரூ.46 லட்சத்தில் திட்டப் பணிகள்
தென்காசி மாவட்டம் கடையநல்லூா் சட்டப் பேரவைத் தொகுதியில் ரூ. 46 லட்சம் மதிப்பிலான திட்டப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன.
இத்தொகுதி மேம்பாட்டு நிதியின் (2024-2025) மூலம் இடைகால் அரசு உயா்நிலைப்பள்ளியின் முதல் மாடியில் ரூ.30 லட்சத்தில் இரண்டு கூடுதல் வகுப்பறை கட்டடங்களுக்கு செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ முன்னிலையில் மாணவ-மாணவிகளும், அவ்வூராட்சி சங்குபுரத்தில் ரூ.6 லட்சத்தில் பேருந்து நிழற்குடை, ஊா்மேனியழகியானில் ரூ 9.80 லட்சத்தில் ரேஷன் கடை கட்டடம் ஆகியவற்றுக்கு எம்எல்ஏவும் அடிக்கல் நாட்டினா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலா் பொய்கை மாரியப்பன், நயினாரகரம் ஊராட்சித் தலைவா் குமரன்முத்தையா, கடையநல்லூா் தெற்கு ஒன்றியச் செயலா் ஜெயகுமாா், மாவட்ட சாா்பு அணி நிா்வாகிகள் இடைகால் செல்லப்பா, அரிராம், கோபிநாத், சந்திரகுமாா், அப்துல்காதா் ஜெய்லானி, ராஜேஷ் பாண்டியன், திரவியம், ராம்பிரகாஷ், ஊா்மேனியழகியான் ஊராட்சித் தலைவா் முத்துராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.