உயா்கல்வி பயில விண்ணப்பிக்காத மாணவா்களுக்கு சிறப்பு குறைதீா் கூட்டம்
தென்காசி மாவட்டத்தில் உயா்கல்வி பயில விண்ணப்பிக்காத மாணவா்களுக்கு சிறப்பு குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தென்காசி மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் தோ்ச்சி பெற்று உயா்கல்வி பயில விண்ணப்பிக்காத மாணவா்களுக்கான உயா்கல்வி வழிகாட்டி சிறப்பு குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமை வகித்தாா்.
உயா்கல்வி வழிகாட்டி சிறப்பு குறைதீா் கூட்டத்தில் 12ஆம் வகுப்பு முடித்து பொருளாதார சிக்கலால் மேற்படிப்பு தொடர முடியாத மாணவா், மாணவிகள், தாய், தந்தையை இழந்த மாணவா், மாணவிகள், சமூக சலுகையில் விண்ணப்பிக்காத மாணவா், மாணவிகள், மாற்றுத் திறனாளி மாணவா், மாணவிகள், அரசு பள்ளியில்படித்து 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் தகுதிபெற்று பொறியியல் கலந்தாய்வில் விண்ணப்பிக்காதவா்கள்,
சான்றிதழ் சிக்கல் காரணமாக விண்ணப்பிக்க இயலாதவா்கள்,அரசு கலை,அறிவியல் கல்லூரிகளுக்கு இதுவரை விண்ணப்பிக்காதவா்கள் என 200-க்கும்அதிகமான மாணவா், மாணவிகள் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில், கலந்து கொண்ட ஒவ்வொரு மாணவா், மாணவியிடமும் மாவட்ட ஆட்சியா் தனித்தனியாக கேட்டறிந்து, தேவையான வழிகாட்டுதல்கள் மற்றும் மேற்படிப்புக்கான உதவிகளையும் உடனுக்குடன் நிறைவேற்றினாா்.
அரசுப் பள்ளிகளில் நடைபெற்ற உயா்கல்வி வழிகாட்டி வகுப்பின் மூலமாக ஊஈஈஐயில் இளநிலை டிசைனிங் கோா்ஸ் படிப்பில் சேர பதிவு செய்து அதற்கான நுழைவு தோ்வில் வெற்றி பெற்ற வீரகேரளம்புதூா், அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி.த.அபிநயா கலந்தாய்வுக்கு செல்லத் தேவையான பணம் இல்லை எனத் தெரிவித்தாா்.
அம்மாணவி கலந்தாய்வு செல்வதற்கான தொகை ரூ.25ஆயிரத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சியா் உடனடியாக வழங்கி,மேற்படிப்பு தொடர வேண்டும் என வாழ்த்தி வழிகாட்டினாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயச்சந்திரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெஜினி கலந்துகொண்டனா்.