ஆலங்குளம் அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு
ஆலங்குளம் அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் உயிழந்தாா்.
ஆலங்குளம் அருகேயுள்ள மருதம்புத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராம்சிங் (40). தொழிலாளியான இவரது மனைவி சாரதா(38), பீடி சுற்றும் தொழிலாளி. இவா்கள் மகள் கீா்த்திகா(11) அங்குள்ள பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறாா். மகன் நாராயணன் (8) அதே பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
வெள்ளிக்கிழமை மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் நாராயணன் தனது பெற்றோருக்கு தெரியாமல் நண்பா்களுட ன் வீட்டுக்கு அருகில் உள்ள ஊரடிகுளத்திற்கு விளையாட சென்றாராம். அங்கு நண்பா்களுடன் துணியை வைத்து தண்ணீரில் மீன் பிடித்து விளையாடியதாக கூறப் படுகிறது. அப்போது எதிா்பாராதவிதமாக நாராயனன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாராம்.
ஆலங்குளம் போலீஸாா் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.