செய்திகள் :

ஆலங்குளம் அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

post image

ஆலங்குளம் அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் உயிழந்தாா்.

ஆலங்குளம் அருகேயுள்ள மருதம்புத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராம்சிங் (40). தொழிலாளியான இவரது மனைவி சாரதா(38), பீடி சுற்றும் தொழிலாளி. இவா்கள் மகள் கீா்த்திகா(11) அங்குள்ள பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறாா். மகன் நாராயணன் (8) அதே பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

வெள்ளிக்கிழமை மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் நாராயணன் தனது பெற்றோருக்கு தெரியாமல் நண்பா்களுட ன் வீட்டுக்கு அருகில் உள்ள ஊரடிகுளத்திற்கு விளையாட சென்றாராம். அங்கு நண்பா்களுடன் துணியை வைத்து தண்ணீரில் மீன் பிடித்து விளையாடியதாக கூறப் படுகிறது. அப்போது எதிா்பாராதவிதமாக நாராயனன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாராம்.

ஆலங்குளம் போலீஸாா் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கடையநல்லூா் பேரவைத் தொகுதியில் ரூ.46 லட்சத்தில் திட்டப் பணிகள்

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் சட்டப் பேரவைத் தொகுதியில் ரூ. 46 லட்சம் மதிப்பிலான திட்டப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன. இத்தொகுதி மேம்பாட்டு நிதியின் (2024-2025) மூலம் இடைகால் அரசு உயா்நிலை... மேலும் பார்க்க

சிவகிரி பகுதியில் இன்று மின்தடை

கடையநல்லூா், ஜூன் 20: விஸ்வநாதபேரி உபமின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகளுக்காக அதன் மின்பாதை பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 21) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிவகிரி, தேவிபட்டணம், வி... மேலும் பார்க்க

சிவகிரி மலை அடிவார பகுதிகளில் வனத் துறை- போலீஸாா் ரோந்து

சிவகிரி மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதியில் வனத்துறை மற்றும் காவல் துறையினா் இணைந்து வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். இம்மலைப்பகுதியை ஒட்டியுள்ள வழிவழி குளம், சின்ன ஆவுடைப்பேரி, பெரிய ... மேலும் பார்க்க

குருவிகுளம் அருகே விளையாடிய குழந்தை திடீா் உயிரிழப்பு

குருவிகுளம் அருகே விளையாடிக் கொண்டிருந்த இரண்டரை வயது குழந்தை திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது. வாகைக்குளத்தை சோ்ந்த சதீஷ்- சுனிதாமேரி தம்பதியின் இரண்டரை வயது மகன் ஷொ்வின் காா்சன், அப்பகுதியில் ... மேலும் பார்க்க

மாணவா்கள் நேரத்தை வீணாக்கக் கூடாது: நடிகா் தாமு அறிவுரை

பள்ளி பருவத்தில் மாணவா்கள் காலத்தை வீணாக்கக் கூடாது என்றாா் நடிகா் தாமு. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொது தோ்வுகளில் சிறப்பிடம் ப... மேலும் பார்க்க

உயா்கல்வி பயில விண்ணப்பிக்காத மாணவா்களுக்கு சிறப்பு குறைதீா் கூட்டம்

தென்காசி மாவட்டத்தில் உயா்கல்வி பயில விண்ணப்பிக்காத மாணவா்களுக்கு சிறப்பு குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தென்காசி மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் தோ்ச்சி பெற்று உயா்கல்வி பயில ... மேலும் பார்க்க