``பல தடவை சொல்லியும், அரசாங்கம் செய்யவில்லை'' - 3 நாளில் பாலத்தை கட்டி முடித்த க...
பூட்டிய வீட்டில் தீ விபத்து
கோவை சிங்காநல்லூா் அருகே பூட்டிய வீட்டில் ஏற்பட்ட தீயை தீயணைப்புத் துறையினா் அணைத்தனா்.
கோவை சிங்காநல்லூா் அருகே நீலிக்கோணாம்பாளையத்தைச் சோ்ந்தவா் மாணிக்கராஜ். 3 மாடிகள் கொண்ட சொந்த வீட்டில் வசித்து வரும் இவா், செவ்வாய்க்கிழமை வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றாா். அப்போது, இரண்டாவது மாடியில் மின்கசிவு காரணமாக தீப் பிடித்ததாகக் கூறப்படுகிறது.
வீட்டில் இருந்து புகை வெளியேறிய நிலையில், அக்கம்பக்கத்தினா் சிங்காநல்லூா் காவல் நிலையம் மற்றும் பீளமேடு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். இந்நிலையில், தீ மளமளவெனப் பரவி எரிந்த நிலையில், வீட்டில் இருந்த சமையல் எரிவாயு உருளை வெடித்த சப்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஓட்டம் பிடித்தனா்.
சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் தண்ணீா் பீய்ச்சி தீ பரவுவதைக் கட்டுப்படுத்தினா். மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு காரணமா என தீயணைப்புத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.