செய்திகள் :

பூண்டி நீர்த்தேக்க கொள்ளளவை உயர்த்த நீர்வளத்துறை திட்டம்!

post image

சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள பூண்டி நீர்த்தேக்கத்தின் கொள்ளளவை 35 அடியிலிருந்து 37 அடியாக உயர்த்த திட்டமிட்டு வருவதாக நீர்வளத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நீர்வளத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

பூண்டி நீர்த்தேக்கம், பெருநகர சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றாகும்.

பெருகி வரும் சென்னை மாநகர மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்ய, நீர்நிலைகளின் சேமிப்பு கொள்ளளவை அதிகரிக்க வேண்டியது காலத்தின் தேவை ஆகும். அவற்றில் ஒன்று பூண்டி நீர்த்தேக்கத்தின் கொள்ளளவை அதிகரிப்பதாகும்.

இதையும் படிக்க: தமிழகத்தில் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வா? - அன்புமணி கேள்வி

அதன்படி, நீர்த்தேக்கத்தின் முழு நீர் மட்டத்தை மேலும் இரண்டு அடி அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளைக் கண்டறிய ரூ. 48 லட்சத்தில் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பூண்டி நீர்த்தேக்கத்தை பலப்படுத்தி நீர்மட்டத்தை 35 அடியிலிருந்து 37 அடியாக உயர்த்துவதன் மூலம் நீர்த்தேக்கத்தின் கொள்ளளவை 3.231 டி.எம்.சி. யிலிருந்து 3.971 டி.எம்.சி-யாக உயர்த்த இயலும் என கணக்கிடப்பட்டுள்ளது. எனவே, தற்போது உள்ள கொள்ளளவினைவிட 0.74 டி.எம்.சி நீரை கூடுதலாக சேமிக்க இயலும்.

தற்போது இத்திட்டத்திற்கான விரிவான ஆய்வுப் பணிகள் முடிவுற்று விரிவான திட்ட மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 2ஆவது இடத்திற்குதான் போட்டி: முதல்வர் மு.க.ஸ்டாலின்

திமுகதான் எப்போதும் ஆளுங்கட்சி, தமிழ்நாட்டில் 2ஆவது இடத்திற்குதான் தற்போது போட்டி உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை சென்னை பெரம்பூர் ... மேலும் பார்க்க

100 நாள் வேலை பணியாளர்களின் ஊதியத்தை நிறுத்தி பட்டினி போடுகிறது: கனிமொழி எம்.பி.

100 நாள் வேலை பணியாளர்களின் ஊதியத்தை நிறுத்தி அவர்களை மத்திய பாஜக அரசு பட்டினி போடுகிறது என்று கனிமொழி எம்.பி. குற்றஞ்சாட்டியுள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், "உழைப்பவன் கூலியை வியர்வை உலர... மேலும் பார்க்க

நீட் தேர்வு: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ஒன்றியத்தில் இந்தியா கூட்டணியின் ஆட்சியமைந்தால்... மேலும் பார்க்க

முதல்வர் மு.க.ஸ்டாலினின் உகாதி வாழ்த்து

தெலுங்கு வருடப்பிறப்பையொட்டி மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உகாதி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், திராவிட மொழிக் குடும்பத்தில் தமிழின் உடன்பிறப்பு... மேலும் பார்க்க

மக்கள் கணிப்பு தான் வெற்றி பெறும்: டி.டி.வி. தினகரன்

மக்கள் கணிப்பு தான் வெற்றி பெறும் என்று அமமுக பொதுச்செயலர் டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதுரை அவனியாபுரத்தில் சனிக்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நாங்கள் தேசிய ஜனநாய... மேலும் பார்க்க

தேனியில் என்கவுன்ட்டர்: காவலர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் மரணம்!

தேனி: தேனி அருகே உசிலம்பட்டியில் காவலரை கல்லால் அடித்துக் கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை காவல் துறை அதிகாரிகள் இன்று(மார்ச் 29) சுட்டுப் பிடிக்க முற்பட்டதில் அந்த நபர் உயிரிழந்தார்... மேலும் பார்க்க