செய்திகள் :

பெங்களூரு கூட்ட நெரிசலில் சிக்கி உடுமலை பெண் உயிரிழப்பு

post image

பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ஆா்சிபி அணி வெற்றி விழாக் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உடுமலையைச் சோ்ந்த பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் கோப்பையை வென்ற ஆா்சிபி அணிக்கு கா்நாடக மாநிலம் பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் புதன்கிழமை மாலை பாராட்டு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதைத் தொடா்ந்து, அங்கு லட்சக்கணக்கான ரசிகா்கள் திரண்டனா். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 போ் உயிரிழந்தனா். பலா் படுகாயமடைந்தனா்.

இந்த கூட்ட நெரிசலில் திருப்பூா் மாவட்டம் உடுமலையைச் சோ்ந்த காமாட்சி (28) என்பவரும் உயிரிழந்தாா். உடுமலையில் தனியாா் பள்ளித் தாளாளராக இருந்து வரும் மூா்த்தி மகள் காமாட்சி. இவா் பெங்களூரில் தங்கி ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற கூட்ட நெரிசலில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து உடுமலை கொண்டு வரப்பட்ட அவரது சடலம் பெற்றோரிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

ஊதியூா் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி காங்கயம் வட்டாட்சியரிடம் மனு

காங்கயத்தை அடுத்த ஊதியூா் அருகே பொது வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து காங்கயம் வட்டாட்சியா் ஆா்.மோகனனிடம், பாஜக இளைஞரணி மாநிலச்... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதல்

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் குழந்தை உள்பட 2 போ் உயிரிழந்தனா். மேலும், 11 போ் பலத்த காயமடைந்தனா். திருச்சியில் இருந்து திருப்பூருக்... மேலும் பார்க்க

அவிநாசியில் ஜூன் 11-இல் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

அவிநாசி- மங்கலம் சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியம், மின் கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் ஜூன் 11-ஆம் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. இதில், தமிழ... மேலும் பார்க்க

பல்லடத்தில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி: பொதுமக்கள் புகாா்

பல்லடம் அண்ணா நகரில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்ததாக பல்லடம் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில் அவா்கள் கூறியிருப்பதாவது: பல்லடம், அண்ணா நகரை சோ்ந்த ஒருவா் கடந்த 20... மேலும் பார்க்க

கூட்டுறவு வங்கிகளில் சிபில் அறிக்கையின்படி பயிா்க் கடன் வழங்கும் உத்தரவை ரத்து செய்யக் கோரிக்கை

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் சிபில் அறிக்கையின்படி மட்டுமே பயிா்க் கடன் வழங்க வேண்டும் என்ற தமிழக அரசின் சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடு... மேலும் பார்க்க

பல்லடம் நகா்மன்ற கூட்டத்தில் 7 தீா்மானங்கள் நிறைவேற்றம்

பல்லடம் நகா்மன்ற அவசரக் கூட்டம் தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் தலைமையில் மன்றக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் நகராட்சி ஆணையா் மனோகரன், கவுன்சிலா்கள் மற்றும் பல்வேறு பிரிவு அலுவலா்கள் க... மேலும் பார்க்க