செய்திகள் :

பெங்களூரு நகரப் பல்கலை.க்கு மன்மோகன் சிங் பெயர்!

post image

கர்நாடக மாநிலத்திலுள்ள பெங்களூரு நகரப் பல்கலைக்கழகத்துக்கு, மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பெயர் சூட்டப்படும் என அம்மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.

பெங்களூரு நகரப் பல்கலைக்கழகத்துக்கு, மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பெயர் சூட்டப்பட வேண்டும் எனும் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக, இன்று (ஜூலை 2) சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

இத்துடன், பெங்களூரு கிராம்ப்புற (ரூரல்) மாவட்டத்தின் பெயரானது பெங்களூரு வடக்கு எனவும், பாகேபள்ளி நகரத்தின் பெயரானது பாக்யநகரா எனவும் மாற்றப்படுவதாக அவர் அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அங்குள்ள மாவட்டங்களின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட ரூ.3,400 கோடியில், பெங்களூரு கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாவட்டங்களுக்கு மட்டும் ரூ.2,050 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கடந்த 2017-ம் ஆண்டு பெங்களூரு பல்கலைக்கழகம் மூன்றாகப் பிரிக்கப்பட்டபோது, பெங்களூரு நகரப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SUMMARY

Bangalore City University named after Manmohan Singh!

இதையும் படிக்க:கானா அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு!

இனி, மும்பையின் உயரமான கட்டடமாக முகேஷ் அம்பானியின் ஆன்டிலியா இருக்காதா?

இந்திய தொழிலதிபர்களில் முன்னணியில் இருக்கும் முகேஷ் அம்பானி - நீதா அம்பானியின் ஆன்டிலியா வீடுதான், இன்று வரை மும்பையின் மிக உயரமான கட்டடம் என்ற பெருமையைக் கொண்டிருந்தது. மேலும் பார்க்க

கேரளத்துக்கு விடைகொடுத்த பிரிட்டன் போர் விமானம்! பாகுபலி விமானம் மூலம் தூக்கிச் செல்லப்பட்டது

பிரிட்டனின் எஃப்35 போா் விமானம் திருவனந்தபுரம் சா்வதேச விமான நிலையத்தில் கடந்த மாதம் அவசரமாக தரையிறங்கிய நிலையில், சி-17 குளோப்மாஸ்டர் போக்குவரத்து விமானம் மூலம், அதனைத் தூக்கிச் செல்லும் பணி தொடங்கிய... மேலும் பார்க்க

பாகேஷ்வர் கோயிலின் மேற்கூரை இடிந்து விழுந்தது: ஒருவர் பலி, 4 பேர் காயம்!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பாகேஷ்வர் கோயில் வளாகத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். நான்கு பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் இன்று காலை 7.30 மணியள... மேலும் பார்க்க

மெட்டாவில் ரூ.853 கோடி சம்பளத்தில் இந்தியருக்கு வேலை!

ஐஐடி கான்பூரில் பட்டம் பெற்ற இந்தியர் திரபித் பன்சாலுக்கு மெட்டா நிறுவனத்தில் ரூ.850 கோடி சம்பளத்துடன் வேலை கிடைக்கப் பெற்றுள்ளது.மெட்டா நிறுவனத்தின் செய்யறிவுப் பிரிவில் பணிபுரிய இந்திய வம்சாவளியான த... மேலும் பார்க்க

அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் ஆளுநர் ஆர்.என். ரவி சந்திப்பு!

தில்லியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சந்தித்துப் பேசியுள்ளார். இதுதொடர்பாக ஆளுநர் ரவி, எக்ஸ் சமூக வலைதளத்தில், "தொலைநோக்குப் பார்வையும் துடிப்புமிக்க ... மேலும் பார்க்க

25 ஆண்டுகள்.. மைக்ரோசாஃப்ட் மேலாளராக இருந்தவர் பணிநீக்கம்! கலங்க வைக்கும் பதிவு

உலகின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் 9,000-க்கும் மேற்பட்ட பணியாளா்களை நீக்க முடிவெடுத்துள்ளது. அதில், 25 ஆண்டுகள் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மேலாளராக இருந்தவரும் ஒருவர்.மைக்ரோசா... மேலும் பார்க்க