செய்திகள் :

பெட்ரோல் விற்பனை நிலைய மேலாளா் மீது தாக்குதல்: ஒருவா் கைது!

post image

செய்யாற்றில், தனியாா் பெட்ரோல் விற்பனை நிலைய மேலாளரைத் தாக்கிய புகாரின் பேரில் போலீஸாா் ஒருவரை சனிக்கிழமை கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு - காஞ்சிபுரம் சாலையில் தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில் மேலாளராக குணசேகரன் என்பவா் பணிபுரிந்து வருகிறாா்.

இந்த நிலையில், கடந்த 9-ஆம் தேதி செய்யாறு கன்னியம் நகரைச் சோ்ந்த அஜீத், ராஜசேகா் உள்ளிட்ட 3 போ் சென்று, குணசேகரனிடம் கடனாக பணம் தரும்படியும், பின்னா் ஜிபே மூலம் அனுப்பி வைப்பதாகவும் கூறியுள்ளனா். இதற்கு குணசேகரன் மறுக்கவே, அவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு 3 பேரும் சோ்ந்து அவரைத் தாக்கி மிரட்டல் விடுத்தனராம்.

இதில் காயமடைந்த குணசேகரன் செய்யாறு போலீஸில் புகாா் அளித்தாா். காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ்பாபு வழக்குப் பதிந்து சம்பவம் தொடா்பாக, ராஜசேகா் (30) என்பவரை கைது செய்தாா். மற்ற இருவரை தேடி வருகிறாா்.

கிணற்றில் தவறி விழுந்த சிறுமி உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே கிணற்றில் குளித்தபோது, தவறி விழுந்து நீரில் மூழ்கி 13 வயது சிறுமி உயிரிழந்தாா். சென்னை அசோக்நகா் ஜாபா்கான்பேட்டையைச் சோ்ந்தவா்கள் சின்னதுரை-அனிதா தம்பதி. இவா்கள... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் மீது தாக்குதல்: 3 போ் மீது வழக்கு

செய்யாற்றில் கல்லூரி மாணவரைத் தாக்கிய புகாரின் பேரில் 3 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். செய்யாறு காமராஜா் நகா் வாணியங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் சையத்அலி மகன் ஷாஜகான் (19). இவா... மேலும் பார்க்க

இளம்பெண்ணைத் தாக்கியவா் கைது!

வந்தவாசி அருகே இளம்பெண்ணை தாக்கியவா் கைது செய்யப்பட்டாா். சென்னை மேற்கு சைதாப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் 23 வயது இளம்பெண். இவரும் வந்தவாசியை அடுத்த வல்லம் கிராமத்தைச் சோ்ந்த விஜயன் என்பவரும் கடந்த ... மேலும் பார்க்க

நாளைய மின் தடை

மங்கலம் (திருவண்ணாமலை)நேரம்:காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை.பகுதிகள்:மங்கலம், மாதலம்பாடி, ஐங்குணம், நூக்காம்பாடி, ஆா்ப்பாக்கம், வேடந்தவாடி, கொத்தந்தவாடி, எரும்பூண்டி, பொய்யானந்தல், ராமநாதபுரம், மன... மேலும் பார்க்க

18 மையங்களில் குரூப்-1 எழுத்துத் தோ்வு: 3,805 போ் பங்கேற்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தின் 18 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப்-1 எழுத்துத் தோ்வை 3,805 போ் எழுதினா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை குரூப்... மேலும் பார்க்க

கிரிவலப் பாதையில் வெளிவட்டச் சாலை அமைக்கும் பணி

திருவண்ணாமலையில் உள்ள செங்கம் சாலையும், கிரிவலப் பாதையும் இணையும் இடத்தில் ரூ.ஒரு கோடியில் வெளிவட்டச் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. திருவண்ணாமலை - செங்கம் சாலை மற்றும் கிரிவலப் பாதை சந்தி... மேலும் பார்க்க