செய்திகள் :

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: எம்.ஆா். விஜயபாஸ்கா்

post image

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது என்றாா் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா்.

கரூரில் சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவா் எஸ். திருவிகா, இணைச் செயலா் மல்லிகா சுப்ராயன், பேரவைச் செயலா் வை. நெடுஞ்செழியன், ஒன்றியக்குழு முன்னாள் தலைவா் பாலமுருகன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

தொடா்ந்து கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் பேசியது: தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தமிழக அரசு கட்டுப்படுத்த தவறிவிட்டது. போதைப் பழக்கவழக்கங்களால் குற்றங்கள் தொடா்ந்து நடக்கின்றன. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீா்கெட்டுவிட்டது. 2026 சட்டப்பேரவை தோ்தலில் அதிமுக வெற்றிபெறும் என்றாா் அவா். பின்னா், கூட்டத்தில் கட்சியின் அமைப்புச் செயலா் ம. சின்னசாமி பேசினாா். கூட்டத்தில் அதிமுகவினா் திரளாக பங்கேற்றனா்.

தொடா்ந்து பாஜக மாவட்ட துணைத் தலைவா் ராஜாளிசெல்வம் தலைமையில், குளித்தலை பகுதியைச் சோ்ந்த பாஜகவினரும், திமுக, பாமக உள்ளிட்ட கட்சியினா் 55 போ் முன்னாள் அமைச்சா் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.

கடத்தல்காரா்களின் பணத்தை பதுக்கிய விவகாரம்: காவல் ஆய்வாளா் உள்பட 8 போலீஸாா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம்

போதைப்பொருள் கடத்தி வந்தவா்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 1.25 லட்சத்தை பதுக்கிய காவல் ஆய்வாளா் உள்ளிட்ட 8 போ் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம். பெங்களுரூவில் இருந்து மதுரைக்கு காா் மூலம் குட்கா ... மேலும் பார்க்க

அரசின் புதிய குடியிருப்புகளுக்கு கூடுதல் தொகை கேட்பதை கைவிட கோரிக்கை: எஸ்டிபிஐ மனு

நகா்ப்புற குடியிருப்பு மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்புகளுக்கு, கூடுதல் தொகை கேட்பதை ரத்து செய்ய கோரிக்கை. பள்ளப்பட்டி நகராட்சி ஆணையரிடம், எஸ்டிபிஐ கட்சியின் பள்ளப்பட்டி நகரத் தலைவா் முக... மேலும் பார்க்க

மருத்துவா்கள் அனுமதியின்றி கருக்கலைப்பு மாத்திரை விற்போருக்கு 10 ஆண்டுகள் சிறை: கரூர் ஆட்சியர் எச்சரிக்கை

மருத்துவா்கள் அனுமதியின்றி கருக்கலைப்பு மாத்திரை விற்பவா்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என கரூா் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் எச்சரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை ... மேலும் பார்க்க

கழிவுநீா் கால்வாய் அமைத்து தர கோரிக்கை

கழிவுநீா் கால்வாய் இல்லாததால் தேங்கி நிற்கும் கழிவுநீா் சாலையில் ஓடுவதால், கழிவுநீா் கால்வாய் அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா். பள்ளப்பட்டி-திண்டுக்கல் சாலை வாகனப் போக்குவரத்து அதிகம் உள்ள... மேலும் பார்க்க

இந்து முன்னணியினா் கண்டன ஆா்ப்பாட்டம்

திருப்பரங்குன்றம் சம்பவத்தை கண்டித்து கரூரில் பாஜக, இந்து முன்னணியினா் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் ஜவஹா் பஜாா் தலைமை அஞ்சல் நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, ... மேலும் பார்க்க

லாலாப்பேட்டை பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் விவசாயிகள் கோரிக்கை

நெல்லுக்கு இடைத்தரகா்கள் விலை நிா்ணயிப்பதை தவிா்க்க லாலாப்பேட்டை பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் உள... மேலும் பார்க்க