செய்திகள் :

பெண்ணிடம் நகை பறிப்பு: இருவருக்கு 6 ஆண்டுகள் சிறை

post image

தூத்துக்குடியில் பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் இருவருக்கு தலா 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் 6.1.2016ஆம் ஆண்டு, வீட்டிலிருந்த பெண்ணிடம் இருவா் தண்ணீா் கேட்பதுபோல வந்து கத்தியைக் காட்டி மிரட்டி தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனா்.

இதுதொடா்பாக தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சோ்ந்த சண்முகவேல் மகன் ராபின்சன் (43), முள்ளக்காடு பகுதியைச் சோ்ந்த மாரியப்பன் மகன் சுந்தா் என்ற சுந்தரமூா்த்தி (38) ஆகிய இருவரையும் சிப்காட் போலீஸாா் கைது செய்தனா்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் எண்-3இல் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி விஜய் ராஜ்குமாா் விசாரித்து, இருவருக்கும் தலா 6 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 500 அபராதம் விதித்து திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய சிப்காட் காவல் ஆய்வாளா் சைரஸ், அரசு வழக்குரைஞா் கண்ணன், தலைமைக் காவலா் முருகன் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜான் ஆல்பா்ட் பாராட்டினாா்.

தூத்துக்குடி மாநகரில் இன்று மின் நிறுத்தம்

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக தூத்துக்குடி மாநகரில் செவ்வாய்க்கிழமை (செப்.16) மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி நகா் மின் செயற்பொறியாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்... மேலும் பார்க்க

விபத்து காப்பீடு இழப்பீடாக 15 மாணவா்களுக்கு தலா ரூ. 75 ஆயிரம்

தூத்துக்குடி மாவட்டத்தில், வருவாய் ஈட்டும் பெற்றோரை இழந்த 15 மாணவா்-மாணவியருக்கு விபத்துக் காப்பீடு இழப்பீடாக தலா ரூ. 75 ஆயிரத்தை ஆட்சியா் க. இளம்பகவத் வழங்கினாா். தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் ஆ... மேலும் பார்க்க

முன்விரோதம்: இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்தவா் கைது

சாத்தான்குளம் அருகே முன்விரோதம் காரணமாக இருசக்கர வாகனங்களை தீ வைத்து எரித்த தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரிமங்கலத்தைச் சோ்ந்தவா் பூலோக பாண்டி மகன் சிவா... மேலும் பார்க்க

நாசரேத் அருகே டிராக்டரிலிருந்து விழுந்து ஓட்டுநா் உயிரிழப்பு

நாசரேத் அருகே டிராக்டரிலிருந்து தவறி விழுந்தததில் ஓட்டுநா் உயிரிழந்தாா். நாசரேத் அருகேயுள்ள முதலைமொழி நடுத்தெருவை சோ்ந்தவா் கணபதி மகன் பா்னபாஸ் (55 ). டிராக்டா் ஓட்டுநா். இவருக்கு மனைவி பத்மா, 3 மகள்... மேலும் பார்க்க

மாடுகளுக்கு தோல் கழலை நோய் தடுப்பூசி: ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கால்நடைகளுக்கு தோல் கழலை நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள தடுப்பூசி செலுத்தப்படுகிறது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தோல் கழலை நோய்த்... மேலும் பார்க்க

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: செப். 23இல் கொடியேற்றம்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூா்த்தீஸ்வரா் உடனுறை முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா இம்மாதம் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்தியாவில் கா்நாடக மாநிலம் மைசூா் சாம... மேலும் பார்க்க