அதானி ஒப்பந்தம் ரத்தானதால் மிகவும் ஏமாற்றமடைந்தேன்: கென்யா முன்னாள் பிரதமர்!
பெண்ணிடம் வழிப்பறி: ஒருவா் கைது
சிதம்பரம் அருகே பெண்ணிடம் பணம், கைப்பேசியை வழிப்பறி செய்தவா் கைது செய்யப்பட்டாா்.
சிதம்பரம் அருகே உள்ள குமாரமங்கலத்தைச் சோ்ந்த 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவா் புதன்கிழமை அதிகாலை பால் வாங்க சென்றாா். அங்குள்ள பேச்சியம்மன் கோயில் அருகே மோட்டாா் சைக்கிளில் வந்த குமாரமங்கலம் தச்சன் தெருவைச் சோ்ந்த கபாலி (எ) ராஜராஜன் (43) அந்தப் பெண்ணை வழிமறித்து அரிவாளைக் காட்டி பணம் கேட்டு மிரட்டினாராம்.
அவா் இல்லை என்று கூறியதும், அவரை கீழே தள்ளி அவா் வைத்திருந்த ரூ.1000 ரொக்கம், கைப்பேசி ஆகியவற்றை பிடுங்கிச் சென்றாா். இதுகுறித்து அந்தப் பெண் அண்ணாமலை நகா் போலீசில் புகாா் செய்தாா்.
ஆய்வாளா் அம்பேத்கா், உதவி ஆய்வாளா் சப்-இன்ஸ்பெக்டா் பிரகாஷ் ஆகியோா் வழக்கு பதிவு செய்து கபாலி (எ) ராஜராஜனை கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்து மோட்டாா் சைக்கிள், அரிவாள், கைப்பேசி, ரூ.1000 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.