செய்திகள் :

பெண்ணின் திருமண வயதைக் குறைக்கும் சீனா!

post image

சீனாவின் பெண்ணின் திருமண வயதை 20ல் இருந்து 18 ஆக குறைக்க வேண்டும் எனப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் பிறப்பு விகிதம் குறைந்துவருவதால், அதனை அதிகரிக்கும் நோக்கில், பெண்ணின் திருமண வயதைக் குறைக்கும் நடவடிக்கைகளில் அந்நாட்டு அரசு ஈடுபட்டுள்ளது.

சீனாவில் தற்போது ஆண்களின் திருமண வயது 22 ஆகவும் பெண்களின் திருமண வயது 20 ஆகவும் உள்ளது. உலக அளவில் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது அதிகமாகும்.

இளைஞர்கள் திருமணம் செய்து கொள்ளவும், குழந்தைகளை பெற்றுக் கொள்ளவும் ஊக்குவிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் கடந்த மூன்று ஆண்டுகளாக மக்கள் தொகை குறைந்துள்ளது. 2024இல் மக்கள் தொகை 14 லட்சம் குறைந்து 140.8 கோடியாக இருந்தது.

சீனாவில் குழந்தை பராமரிப்பு மற்றும் திருமண செலவுகளை கருத்தில் கொண்டு பெரும்பாலான இளைஞர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதில்லை எனக் கூறப்படுகிறது.

திருமணம் செய்துகொள்ள விரும்பாததும், திருமணமானவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாததும் சீன அரசு சந்திக்கும் சவாலாக உள்ளது. முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், பொருளாதார சிக்கல் ஏற்படும் அபாயமும் நிலவுகிறது.

இதனால், பெண்ணின் திருமண வயதை 18 ஆக குறைக்க சீன அரசின் தேசிய அரசியல் ஆலோசகர் சென் சோங்ஸி பரிந்துரை செய்துள்ளார்.

இளைஞர்கள் திருமணம் செய்து கொள்ளவும், குழந்தைகளை பெற்றுக் கொள்ளவும் ஊக்குவிக்க இந்த நடவடிக்கை உதவும் எனப் பரிந்துரையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க | பில்கேட்ஸின் நிகர சொத்து மதிப்பளவில் எலானுக்கு இழப்பு!

அதிகாரத்தில் நீடிக்க வர்த்தகப் போரைப் பயன்படுத்தும் ’ஆளுநர் ட்ரூடோ’: டிரம்ப்

அதிகாரத்தில் நீடிப்பதற்காக வர்த்தகப் போரைப் பயன்படுத்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நினைப்பதாக குற்றம்சாட்டியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அவரை ஆளுநர் என்று குறிப்பிட்டுள்ளார்.அமெரிக்க அதிபராக... மேலும் பார்க்க

அரபு நாடுகளின் அமைதி திட்டம்: அமெரிக்கா, இஸ்ரேல் நிராகரிப்பு

ஜெருசலேம் : காஸாவில் போா் நிறுத்தத்தை நீட்டிப்பது குறித்து அரபு நாடுகள் முன்வைத்துள்ள செயல்திட்டத்தை அமெரிக்காவும் இஸ்ரேலும் நிராகரித்துள்ளன.இஸ்ரேலுக்கும் காஸாவின் ஹமாஸ் படையினருக்கும் கடந்த 2023 அக்ட... மேலும் பார்க்க

தில்லியில் ரைசினா மாநாடு: உக்ரைன் வெளியுறவு அமைச்சா் பங்கேற்க வாய்ப்பு

தில்லியில் நடைபெறும் ரைசினா மாநாட்டில், உக்ரைன் வெளியுறவு அமைச்சா் அந்த்ரி சிபிஹா கலந்துகொள்ள உள்ளாா். ஆண்டுதோறும் தில்லியில் ரைசினா மாநாடு நடைபெறுகிறது. இதில் புவி அரசியல் விவகாரங்கள் குறித்து விவாத... மேலும் பார்க்க

ஜொ்மனி காா் தாக்குதல்: நீடிக்கும் மா்மம்

ஜொ்மனியின் மேற்குப் பகுதி நகரான மேன்ஹைமில் நடத்தப்பட்ட காா் தாக்குதல் குறித்த மா்மம் நீடித்துவருகிறது.அந்த நகரிலுள்ள பாரடெப்ளாட்ஸ் தெருவில் நடத்தப்பட்ட இந்தக் காா் தாக்குதலில் 2 போ் உயிரிழந்தனா்; ச... மேலும் பார்க்க

ஹசீனா நாடு கடத்தல்: இந்தியாவிடம் பதில் இல்லை -வங்கதேசம்

டாக்கா : வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவை நாடு கடத்துவது தொடா்பாக இந்தியாவிடம் அதிகாரபூா்வமாக எந்தப் பதிலும் இல்லை என்று அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் தெரிவித்தாா். வங்கதேசத்தில்... மேலும் பார்க்க

ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து அமெரிக்காவுடன் பேசுவோம் -ரஷியா

மாஸ்கோ : அமெரிக்காவுடன் தாங்கள் நடத்தும் பேச்சுவாா்த்தையில் ஈரான் அணுசக்தி திட்டங்கள் குறித்த அம்சங்களும் இடம் பெறும் என்று ரஷியா கூறியுள்ளது.இது குறித்து ரஷிய அதிபா் மாளிகை புதன்கிழமை வெளியிட்டுள்ள அ... மேலும் பார்க்க