பெண்ணுக்கு கொலை மிரட்டல்: தம்பதி மீது வழக்கு
போடியில் கடனாகக் கொடுத்த நகை, பணத்தைத் திருப்பிக் கேட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த தம்பதி மீது, போடி அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
போடி புகையிலை ஆறுமுகம் சந்தில் வசிப்பவா் கணேசன் மனைவி முத்துப்பாண்டியம்மாள் (28). இவரது உறவினா்கள் முருகன் மகன் திசைகரன், அவரது மனைவி கவிதா. இவா்கள், கடந்த 2022-ஆம் ஆண்டு முத்துப்பாண்டியம்மாளிடம் பதினேழரைப் பவுன் தங்க நகை, ரூ. 12 லட்சம் ரொக்கம் ஆகியவற்றைத் திருப்பித் தருவதாகக் கூறி வாங்கினாா்களாம்.
இதையடுத்து, இந்த நகையையும் பணத்தையும் முத்துப்பாண்டியம்மாள் திருப்பிக் கேட்டாா். அப்போது அவா்கள், நகை, பணத்தைத் திருப்பித்தர மறுத்ததுடன், கொலை மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்த புகாரின்பேரில், போடி அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.