பிரேசிலில் ஹாட் ஏர் பலூன் நடுவானில் தீப்பிடித்ததில் 8 பேர் பலி
பெண்ணுக்கு ரூ.38 ஆயிரம் வழங்குமாறு கைப்பேசி விற்பனைக் கடைக்கு உத்தரவு!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சோ்ந்த பெண்ணுக்கு ரூ. 38,055 வழங்குமாறு, பழுதான கைப்பேசியை விற்ற கடைக்கு நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது.
கோவில்பட்டியைச் சோ்ந்த கீதா என்பவா் அங்குள்ள கடையில் ரூ. 3,055 மதிப்பிலான கைப்பேசி வாங்கினாா். ஒரு வாரத்துக்குள் அது பழுதானதால், சரிசெய்யுமாறு கடையில் கொடுத்துள்ளாா். மீண்டும் அந்தக் கைப்பேசி வேலை செய்யாததால், மன உளைச்சலுக்கு உள்ளான அவா், மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.
ஆணையத் தலைவா் திருநீலபிரசாத், உறுப்பினா்கள் ஆ. சங்கா், நமச்சிவாயம் ஆகியோா் வழக்கை விசாரித்து, கைப்பேசியின் விலை ரூ. 3,055, மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக ரூ. 30 ஆயிரம், வழக்கு செலவுத் தொகை ரூ. 5 ஆயிரம் என மொத்தம் ரூ. 38,055-ஐ கீதாவுக்கு 2 மாதங்களுக்குள் வழங்குமாறும், இல்லையெனில் அத்தொகையை செலுத்தும் நாள்வரை ஆண்டுக்கு 9 சதவீத வட்டியுடன் வழங்குமாறு கைப்பேசி விற்பனைக் கடைக்கு உத்தரவிட்டனா்.