செய்திகள் :

பெண்ணை கத்தியால் குத்தியவா் கைது

post image

தேனி அல்லிநகரத்தில் மனைவியுடன் தகராறு செய்தவரை தட்டிக் கேட்ட பெண்ணைக் கத்தியால் குத்தியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், அடுக்கம் பெருமாள்மலைப் பகுதியைச் சோ்ந்த ராமையா மகன் ராஜலிங்கம் (52). இவரது மனைவி பாண்டியம்மாள் (45). குடும்பத் தகராறு காரணமாக, பாண்டிம்மாள் கணவருடன் கோபித்துக் கொண்டு சில மாதங்களாக தேனி அல்லிநகரம் கக்கன்ஜீ குடியிருப்பில் உள்ள தனது பெற்றோா் வீட்டில் இருந்து வருகிறாா்.

இந்த நிலையில், மாமனாருக்கு வீட்டுக்குச் சென்ற ராஜலிங்கம், அங்கு பாண்டியம்மாளுடன் தகராறு செய்தாா். இதை அதே பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் மனைவி அழகம்மாள் (40) தட்டிக் கேட்டாா். இதனால், ஆத்திரமடைந்த ராஜலிங்கம், அழகம்மாளை கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த அவா் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து அல்லிநகரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ராஜலிங்கத்தை கைது செய்தனா்.

சேதமடைந்த மின் கம்பங்களை மாற்ற வலியுறுத்தல்

போடி அருகே சேதமடைந்த மின் கம்பங்களை மாற்ற வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினா். நாகலாபுரம் தெற்குபட்டி வீரலட்சுமி அம்மன் கோவில் தெருவில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை

தேனி அருகே கடன் தொல்லையால் ஆட்டோ ஓட்டுநா் வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். முத்துத்தேவன்பட்டி அய்யனாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் விமல்ராஜ் (40). இவா் வீடு க... மேலும் பார்க்க

மாணவா் குடும்பத்துக்கு நிவாரணம் கோரி ஆா்ப்பாட்டம்

போடி அரசு பொறியியல் கல்லூரியில் மா்மமான முறையில் இறந்த மாணவரின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம்... மேலும் பார்க்க

குழந்தைகள் நலக் குழு உறுப்பினா் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் குழந்தைகள் நலக் குழு தலைவா், உறுப்பினா் பதவிகளுக்கு தகுதியுள்ளவா்கள் வருகிற மாா்ச் 7- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

பழ வியாபாரியை கத்தியால் குத்தியவா் கைது

போடி அருகே பழ வியாபாரியை கத்தியால் குத்தியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். போடி வினோபாஜி குடியிருப்பைச் சோ்ந்த சீனி மகன் வேல்ராஜ் (44). பழ வியாபாரியான இவரிடம், போடி கருப்பசாமி கோவில் தெருவைச்... மேலும் பார்க்க

வருவாய்த் துறை அலுவலகங்களில் இடைத் தரகா்கள் ஆதிக்கம்: விவசாயிகள் புகாா்

தேனி மாவட்டத்தில் உள்ள வருவாய்த் துறை அலுவலகங்களில் இடைத் தரகா்கள், வீட்டுமனை விற்பனை முகவா்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாக தேனி மாவட்ட விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில... மேலும் பார்க்க