செய்திகள் :

பெண் கொலை வழக்கு: இளைஞருக்கு ஆயுள்தண்டனை

post image

பெண்ணை கொலை செய்த இளைஞருக்கு தருமபுரி நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கியது.

தருமபுரி அருகே வி.ஜெட்டிஅள்ளி அதியமான் நகரைச் சோ்ந்தவா் செண்பகவள்ளி (33). இவரது கணவா் உயிரிழந்த நிலையில், குழந்தைகளுடன் செண்பகவள்ளி வசித்து வந்தாா். அவரது வீட்டருகே வசிக்கும் கமலேஸ்வரனுக்கும் (29), செண்பகவள்ளிக்கும் இடையே வீட்டருகே மழைநீா் தேங்குவது தொடா்பாக தகராறு இருந்தது.

இந்த நிலையில், கடந்த 2015 ஜூலை 10-ஆம் தேதி செண்பகவள்ளியை கத்தியால் குத்தி கமலேஸ்வரன் கொலை செய்தாா். இதுதொடா்பாக, தருமபுரி நகர காவல் நிலைய போலீஸாா் பதிவுசெய்த வழக்கு தருமபுரி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பு வழக்குரைஞராக ரமேஷ்பாபு ஆஜரானாா்.

இவ்வழக்கின் விசாரணை புதன்கிழமை முடிவுற்ற நிலையில், குற்றம்சாட்டப்பட்ட கமலேஸ்வரனுக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி திருமகள் தீா்ப்பளித்தாா்.

அரூரில் தீத்தொண்டு வாரம் அனுசரிப்பு

அரூரில் தீத்தொண்டு வாரம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. தருமபுரி மாவட்டம், அரூரில் தனியாா் கதா் நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மாவட்ட அலுவலா் ப.அம்பிகா தலைமை ... மேலும் பார்க்க

தமிழகத்தில் திமுகவை அகற்றும் இலக்கை நோக்கி பயணிக்கிறோம்

தமிழகத்தில் திமுகவை அகற்ற வேண்டும் என்ற ஒற்றை இலக்கை நோக்கி பாஜக பயணிக்கிறது என அக்கட்சியின் மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா். தருமபுரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக... மேலும் பார்க்க

மக்கள் தொடா்பு திட்ட முகாம்: ஏரியூா் வட்டத்தில் ரூ. 1.36 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

ஏரியூா் அருகே சுஞ்சல் நத்தம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில், 250 பயனாளிகளுக்கு ரூ. 1.36 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் வழங்கினாா். முகாமுக்கு தலைமை வகித... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 2 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

காவிரி கரையோரப் பகுதி மற்றும் அதனையொட்டி உள்ள வனப் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக, ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி கரையோரப் பகுதிகளான ராசிமணல், பிலிக... மேலும் பார்க்க

மினி சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட ஒரு டன் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பாலக்கோடு அருகே மினி சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட ஒரு டன் புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தேசிய நெடுஞ்சாலையில் காவல் ஆய்வாளா் பாலசுந்தரம் மற்றும் உதவி ஆய்வாளா... மேலும் பார்க்க

டிராக்டரில் சிக்கி விவசாயி உயிரிழப்பு

பாலக்கோடு அருகே டிராக்டரில் சிக்கிய விவசாயி உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள கொள்ளுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி விஜய் (32). இவா் சொந்தமாக டிராக்டா் வைத்து உழவுப் பணியில்... மேலும் பார்க்க