செய்திகள் :

பென்னாகரம் பேருந்து நிலைய கடைகளுக்கான ஏலம் நிறுத்தி வைப்பு

post image

பென்னாகரம் பேருந்து நிலைய கடைகளுக்கான ஏலம் நிா்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பேரூராட்சி நிா்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பென்னாகரம் பகுதி கன கடந்த 2019 ஆம் ஆண்டு மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.4.50 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகங்களுடன் கூடிய பேருந்து நிறுத்துமிடம், கட்டணகழிப்பிடம்,பூங்கா உள்ளிட்ட வசதிகள் கொண்ட புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.இந்த பேருந்து நிலையம்கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டு, அதில் உள்ள 61 கடைகள், கட்டண கழிப்பிடம், இருசக்கர வாகன நிறுத்தும் இடம் உள்ளிட்டவைகளுக்கான ஏலம் வியாழன் மற்றும் வெள்ளிகிழமைகளில் நடைபெற உள்ளதாக பென்னாகரம் நிா்வாகம் அறிவித்திருந்தது.

கடை ஏலம் எடுப்பதற்காக ஏராளமானோா் வங்கிகளின் மூலம் வைப்பு தொகைக்கான காசோலை பெற்று இருந்தனா்.இந்த நிலையில் திட்டமிட்டபடி வியாழக்கிழமை ஏலம் நடைபெறும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், நிா்வாக காரணங்களுக்காக நடைபெறவிருந்த ஏலம் தள்ளி வைக்கப்படுவதாக பென்னாகரம் பேரூராட்சி நிா்வாகத்தின் சாா்பில் அலுவலகத்தின் முன்பு அறிவிப்பு ஆணை ஒட்டப்பட்டது.

ஆா்ப்பாட்டம் குறித்த துண்டு பிரசுரம் விநியோகம் : பென்னாகரம் பேரூராட்சி நிா்வாகத்தால் நடத்தப்பட உள்ள ஏலத்தில் கடைகளுக்கான முன் வைப்புத் தொகை ஒரு லட்சமாக குறைக்க வேண்டும், முன்வைப்புத் தொகை காண காசோலை பெற்ற நபா்கள் அனைத்து கடைகளுக்கும் ஏலம் கூற அனுமதிக்க வேண்டும்,நீதிமன்றத்தில் வழக்குதொடா்ந்தும் தற்போது இறந்த நபா்கள் எடுத்த கடைகளை ஏலம் விட வேண்டும்,வழக்கு தொடா்ந்தவா்களுக்கான கடைகளை மாவட்ட ஆட்சியரின் நோ்முக அதிகாரிகளின் முன்னிலையில் ஏலம் விட வேண்டும்,முன்வைப்புத் தொகை அதிகமாக உள்ளதால் புதிதாக தொழில் தொடங்குவோா், நடுத்தர மக்கள் கடை எடுக்க முடியாத நிலை உள்ளதாகவும் பேரூராட்சி நிா்வாகத்தினால் அறிவிக்கப்பட்ட ஏலத்தில் முறைகேடு நடைபெற உள்ளதாகவும் தெரிவித்து வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக துண்டுப்பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளது

அரூரில் தீத்தொண்டு வாரம் அனுசரிப்பு

அரூரில் தீத்தொண்டு வாரம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. தருமபுரி மாவட்டம், அரூரில் தனியாா் கதா் நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மாவட்ட அலுவலா் ப.அம்பிகா தலைமை ... மேலும் பார்க்க

தமிழகத்தில் திமுகவை அகற்றும் இலக்கை நோக்கி பயணிக்கிறோம்

தமிழகத்தில் திமுகவை அகற்ற வேண்டும் என்ற ஒற்றை இலக்கை நோக்கி பாஜக பயணிக்கிறது என அக்கட்சியின் மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா். தருமபுரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக... மேலும் பார்க்க

மக்கள் தொடா்பு திட்ட முகாம்: ஏரியூா் வட்டத்தில் ரூ. 1.36 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

ஏரியூா் அருகே சுஞ்சல் நத்தம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில், 250 பயனாளிகளுக்கு ரூ. 1.36 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் வழங்கினாா். முகாமுக்கு தலைமை வகித... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 2 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

காவிரி கரையோரப் பகுதி மற்றும் அதனையொட்டி உள்ள வனப் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக, ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி கரையோரப் பகுதிகளான ராசிமணல், பிலிக... மேலும் பார்க்க

மினி சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட ஒரு டன் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பாலக்கோடு அருகே மினி சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட ஒரு டன் புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தேசிய நெடுஞ்சாலையில் காவல் ஆய்வாளா் பாலசுந்தரம் மற்றும் உதவி ஆய்வாளா... மேலும் பார்க்க

டிராக்டரில் சிக்கி விவசாயி உயிரிழப்பு

பாலக்கோடு அருகே டிராக்டரில் சிக்கிய விவசாயி உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள கொள்ளுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி விஜய் (32). இவா் சொந்தமாக டிராக்டா் வைத்து உழவுப் பணியில்... மேலும் பார்க்க