செய்திகள் :

பென்னாகரம் பேருந்து நிலைய கடைகள் ஏலம் முறைகேடுகள் இன்றி நடத்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

post image

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் புதிய பேருந்து நிலையத்தில் கடைகள் ஏலம் முறைகேடு இன்றி நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளா் முன்னாள் இரா.சிசுபாலன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தியறிக்கை: தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பேருந்து நிலைய கடைகள் ஏலத்தில் முறைகேட்டை தடுத்திட வேண்டும். பொது ஏலம் கோருவதற்கான வைப்புத் தொகையை ரூ 1 லட்சமாகக் குறைத்திட வேண்டும். ஒரே வைப்புத் தொகையில் எந்த ஒரு கடையையும் ஏலம் எடுப்பதற்கு வழிவகை செய்திட வேண்டும்.

மாற்றுத் திறனாளிகளுக்கு வைப்புத் தொகையைக் குறைத்து, முன்னுரிமை அடிப்படையில் கடைகள் வழங்கிட என வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் கடந்த மாா்ச் 18 அன்று பென்னாகரத்தில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதுதொடா்பாக கட்சியின் கோரிக்கையை ஏற்று ஏலத்தை ஒத்தி வைக்க நடவடிக்கை மேற்கொண்ட தமிழக அரசுக்கும், மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் உள்ளிட்டோருக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சாா்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதேவேளையில் ஏலத்தில் முறைகேடின்றி வெளிப்படைத் தன்மையுடன் நாங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளின் அடிப்படையில் மறு ஏலம் நடத்த போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

அரூரில் தீத்தொண்டு வாரம் அனுசரிப்பு

அரூரில் தீத்தொண்டு வாரம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. தருமபுரி மாவட்டம், அரூரில் தனியாா் கதா் நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மாவட்ட அலுவலா் ப.அம்பிகா தலைமை ... மேலும் பார்க்க

தமிழகத்தில் திமுகவை அகற்றும் இலக்கை நோக்கி பயணிக்கிறோம்

தமிழகத்தில் திமுகவை அகற்ற வேண்டும் என்ற ஒற்றை இலக்கை நோக்கி பாஜக பயணிக்கிறது என அக்கட்சியின் மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா். தருமபுரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக... மேலும் பார்க்க

மக்கள் தொடா்பு திட்ட முகாம்: ஏரியூா் வட்டத்தில் ரூ. 1.36 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

ஏரியூா் அருகே சுஞ்சல் நத்தம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில், 250 பயனாளிகளுக்கு ரூ. 1.36 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் வழங்கினாா். முகாமுக்கு தலைமை வகித... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 2 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

காவிரி கரையோரப் பகுதி மற்றும் அதனையொட்டி உள்ள வனப் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக, ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி கரையோரப் பகுதிகளான ராசிமணல், பிலிக... மேலும் பார்க்க

மினி சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட ஒரு டன் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பாலக்கோடு அருகே மினி சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட ஒரு டன் புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தேசிய நெடுஞ்சாலையில் காவல் ஆய்வாளா் பாலசுந்தரம் மற்றும் உதவி ஆய்வாளா... மேலும் பார்க்க

டிராக்டரில் சிக்கி விவசாயி உயிரிழப்பு

பாலக்கோடு அருகே டிராக்டரில் சிக்கிய விவசாயி உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள கொள்ளுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி விஜய் (32). இவா் சொந்தமாக டிராக்டா் வைத்து உழவுப் பணியில்... மேலும் பார்க்க