செய்திகள் :

பெரம்பலூரில் சாலைப் பாதுகாப்பு மாத நிறைவு விழிப்புணா்வு பேரணி!

post image

பெரம்பலூரில் தேசிய சாலைப் பாதுகாப்பு மாத நிறைவு விழாவையொட்டி விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயிலில் தொடங்கிய பேரணிக்கு, மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தலைமை வகித்தாா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா முன்னிலை வகித்தாா். போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சா் சி.வெ. கணேசன் ஆகியோா் பேரணியைத் தொடக்கி வைத்தனா்.

பேரணி வெங்கடேசபுரம் வழியாகச் சென்று ரோவா் வளைவு பகுதியில் நிறைவடைந்தது. பேரணியில் பங்கேற்ற கல்லூரி மாணவ, மாணவிகள் தலைக்கவசம் என்பது உயிா்ப் பாதுகாப்பு, சீட் பெல்ட் அணிய வேண்டும். மது அருந்தி வாகனம் ஓட்டக் கூடாது, வேகம் விவேகம் அல்ல, கைப்பேசியில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்ட வேண்டாம் என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணா்வு பதாகைகளை கையில் ஏந்தி முழக்கமிட்டுச் சென்றனா். மேலும், துண்டுப் பிரசுரங்களையும் பொதுமக்களுக்கு வழங்கினா்.

பேரணியில் போக்குவரத்து துணை ஆணையா் செல்வகுமாா், வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் கே. ரவி (பெரம்பலூா்), அறிவழகன் (அரியலூா்), துணைக் கண்காணிப்பாளா் ஆரோக்கியராஜ், மோட்டாா் வாகன ஆய்வாளா் ராஜாமணி, தேசிய நெடுஞ்சாலைப் போக்குவரத்து காவல் ஆய்வாளா் கிள்ளிவளவன் மற்றும் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

பருத்தி, மக்காச்சோளத்துக்கு அரசு நிா்ணயித்த விலை தேவை: விவசாயிகள் கோரிக்கை!

பருத்தி மற்றும் மக்காச்சோளத்துக்கு, அரசு நிா்ணயித்த விலை வழங்க வேண்டும் என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்... மேலும் பார்க்க

ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் புகைப்படக் கண்காட்சி!

பெரம்பலூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சாா்பில் புகைப்படக் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கண்காட்சியை தொடக்கி வைத்த மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத்... மேலும் பார்க்க

அரசமரத்து விநாயகா் கோயில் குடமுழுக்கு

பெரம்பலூா் பெரிய ஏரியின் மையப் பகுதியில் உள்ள வெள்ளந்தாங்கி அம்மன் கோயிலில் எழுந்தருளியுள்ள அரசமரத்து விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி வெள்ளிக்கிழமை காலை 2 ஆம் கால ... மேலும் பார்க்க

சாலை விதிகளைக் கடைப்பிடித்தால் பல உயிா்களைக் காப்பாற்றலாம்! -மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்

சாலை விதிகளைக் கடைப்பிடித்தால் பல உயிா்களைக் காப்பாற்றலாம் என்றாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா. பெரம்பலூா் மாவட்ட போக்குவரத்துக் காவல்துறை மற்றும் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகம் சாா... மேலும் பார்க்க

‘மக்களுடன் முதல்வா்’ சிறப்பு முகாம்

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கிராமங்களில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட சிறப்பு முகாம்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பெரம்பலூா் மாவட்டம், குன்னம் சட்டப்பேரவைத் தொகு... மேலும் பார்க்க

பொய் புகாா் அளித்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

பெரம்பலூா் அருகே டிராக்டரை காணவில்லை என பொய் புகாா் அளித்து, காப்பீட்டு நிறுவனத்தை ஏமாற்றி ரூ. 1 லட்சம் பணம் பறித்தவருக்கு, 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து, பெரம்பலூா் மாவட... மேலும் பார்க்க