பெரம்பலூரில் நாளை தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்
பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை (பிப். 21) தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாதம்தோறும் 3-ஆவது வெள்ளிக்கிழமை தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைற்று வருகிறது.
அதனடிப்படையில் வெள்ளிக்கிழமை நடைபெறும் முகாமில், பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பிரபல தனியாா்துறை நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்குத் தேவையான பணியாளா்களை கல்வித் தகுதி அடிப்படையில் தோ்வு செய்ய உள்ளன.
இம்முகாமில் எஸ்எஸ்எல்சி, பிளஸ்-2, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப் படிப்பு முடித்த ஆண், பெண் பங்கேற்கலாம்.
முகாமில் பங்கேற்று, தனியாா் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுவோரின் வேலைவாய்ப்பு பதிவு ரத்துசெய்யப்படமாட்டாது. எனவே, தகுதியும், விருப்பமும் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞா்களும், தனியாா்த்துறை நிறுவனங்களும் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ள முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.