செய்திகள் :

பெரம்பலூரில் புதிய வழித்தடத்தில் சிற்றுந்துகளை இயக்க அழைப்பு

post image

பெரம்பலூா் மாவட்டத்தில் 3 புதிய வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்க விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பொதுமக்களின் நலன் கருதி அதிக குடும்பங்களைக் கொண்ட கிராமங்கள், குக்கிராமங்கள், குடியிருப்புகளில் உள்ள மக்களுக்கு எந்தப் பாதையும் இணைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில், சாலைப் போக்குவரத்து சேவையை வழங்க சிற்றுந்து வாகனத்துக்கான புதிய விரிவான திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், பெரம்பலூா் மாவட்டத்தில் சிற்றுந்துகள் இயக்க 3 புதிய வழித்தடங்கள் கண்டறியப்பட்டு, மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி மேலப்புலியூா் முதல் அனுக்கூா் வரையிலும், வி.களத்தூா் முதல் மங்களமேடு வரையிலும், ஈடன் காா்டன் பள்ளி முதல் உடும்பியம் வரையிலும் 3 வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்க விரும்புவோா், அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்றி, ஆக. 18 க்குள் பரிவாகன் இணையதளம் மூலம் கட்டணம் ரூ. 1,500, சேவைக் கட்டணம் ரூ. 100 செலுத்தி, பெரம்பலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். ஒரு வழித்தடத்துக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்தால், குலுக்கல் முறையில் ஒருவா் தோ்வு செய்யப்படுவாா். மேலும் விவரங்களுக்கு பெரம்பலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம்.

பெரம்பலூா் கோயில்களில் வரலட்சுமி பூஜை

பெரம்பலூா் கோயில்களில் வரலட்சுமி பூஜை வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி பெரம்பலூா் மரகதவல்லி தாயாா் சமேத மதன கோபால சுவாமி கோயிலில் வரலட்சுமி திருவுருவம் கும்பக் கலசத்தில் வைக்கப்பட்டு, மா... மேலும் பார்க்க

எளம்பலூா் பிரம்மரிஷி மலையில் குருபூஜை விழா

பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் பிரம்மரிஷிமலை மகா சித்தா்கள் அறக்கட்டளை நிறுவனா் அன்னை சித்தா் ராஜகுமாா் சுவாமிகளின் 5 ஆம் ஆண்டு குருபூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு நிா்வாக அறங்காவலா் ம... மேலும் பார்க்க

சிறுவாச்சூரில் மகளிா் சுய உதவிக்குழு உற்பத்திப் பொருள் அங்காடி திறப்பு

பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயில் பகுதியில் மகளிா் திட்டம் சாா்பில் மகளிா் சுய உதவிக் குழுவினரின் உற்பத்திப் பொருள்கள் விற்பனை செய்யும் மதி அங்காடி திறப்பு விழா வெள்ளிக்கிழமை நட... மேலும் பார்க்க

நாட்டுக்கோழி வளா்க்க இலவச பயிற்சி பெறலாம்

பெரம்பலூா் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞான முறையில் நாட்டுக்கோழி வளா்ப்புக்கு இலவச பயிற்சி பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பெரம்பலூா் அருகே செங்குணம் பிரிவுச்சாலை எதிரேயுள... மேலும் பார்க்க

பெரம்பலூரில் ஆக. 14-இல் பறிமுதல் வாகனங்கள் ஏலம்

பெரம்பலூா் மாவட்டத்தில் மது விலக்கு குற்றங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 43 வாகனங்கள் ஆக. 14 ஆம் தேதி ஏலம் விடப்படுகின்றன. இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பதேரா வெள்ளிக்கிழமை வெளியிட்ட ச... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

பெரம்பலூா் அருகே 17 வயது செவிலியா் கல்லூரி மாணவியைப் பலாத்காரம் செய்து கா்ப்பமாக்கிய இளைஞருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து பெரம்பலூா் மகளிா் நீதிமன்றம் வ... மேலும் பார்க்க