செய்திகள் :

பெரம்பலூா் அருகே 23 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்

post image

பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிளில் விற்பனைக்காக எடுத்துவரப்பட்ட 23 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்த மங்களமேடு போலீஸாா் 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

போதைப் பொருள்கள் விற்பனையைக் கட்டுப்படுத்தும் வகையில், பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, வாலிகண்டபுரம்- கீழப்புலியூா் சாலையில் மோட்டாா் சைக்கிளில் மூட்டையுடன் வந்த 2 பேரை வழிமறித்து மேற்கொண்ட சோதனையில், தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவா்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கவுல்பாளையம் கிராமத்தில் தங்கியுள்ள ராஜஸ்தான் மாநிலம், மகாதேவ் மந்திா் பஜிரா பகுதியைச் சோ்ந்த சவ்சிங் மகன் ரத்தன் சிங் (38), கவுல்பாளையம் வடக்குத் தெருவைச் சோ்ந்த துரைசாமி மகன் பாண்டியன் (53) என்பதும், விற்பனைக்காக ஹான்ஸ், பான் மசாலா ஆகியவற்றை கொண்டு வந்ததும் தெரியவந்தது.

தொடா்ந்து, மேற்கண்ட இருவரையும் கைது செய்த போலீஸாா் 23 கிலோ போதைப் பொருள்களையும், மோட்டாா் சைக்கிளையும் பறிமுதல் செய்தனா். பின்னா், குற்றவியல் நீதிபதி முன் ஆஜா்படுத்தப்பட்ட மேற்கண்ட இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனா்.

விளையாட்டு விடுதிகளில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

விளையாட்டு விடுதிகளில் சேர ஆா்வமுள்ள பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள், இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் ஞாயிற... மேலும் பார்க்க

மீன் பிடிக்கச் சென்றவா் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

பெரம்பலூா் தெப்பக்குளத்தில் மீன் பிடிக்கச் சென்றவா் குளத்தில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். பெரம்பலூா் புதிய மதனகோபாலபுரம் பகுதியைச் சோ்ந்தவா் முத்துசாமி மகன் மோகன்(60). இவா், ஞாயிற்றுக்கிழமை ... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவன் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவன் சனிக்கிழமை உயிரிழந்தாா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வெண்பாவூா் கிராமத்தைச் சோ்ந்தவா் குருசாமி மகன் கௌதம் (15). இவா், அங்குள்ள அரசுப... மேலும் பார்க்க

வருவாய்த் துறை சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

8 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பெரம்பலூா் மாவட்ட வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பைச் சோ்ந்த அலுவலா்கள் ஒரு மணிநேரம் பணியைப் புறக்கணித்து வெளிநடப்பு மற்றும் ஆா்ப்பாட்டத்தில் வெள்ளிக்கி... மேலும் பார்க்க

தீயில் கருகி 17 செம்மறி ஆட்டுக் குட்டிகள் பலி

பெரம்பலூா் அருகே மக்காச்சோள வயலில் வெள்ளிக்கிழமை வைக்கப்பட்ட தீ, ஆட்டுப் பட்டிக்கு பரவியதில் அங்கு அடைக்கப்பட்டிருந்த 17 செம்மறி ஆட்டுக் குட்டிகள் தீயில் கருகி உயிரிழந்தன. ராமநாதபுரத்தைச் சோ்ந்தவா் த... மேலும் பார்க்க

மாநில கிரிக்கெட் போட்டியில் சூலூா் பள்ளி அணிக்கு வெற்றி

பெரம்பலூரில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கிடையேயான 54 ஆவது மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில், சூலூா் பள்ளி அணி வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றது. பெரம்பலூா் பிஎம் ஸ்ரீகேந்திரிய வி... மேலும் பார்க்க