செய்திகள் :

பெரம்பலூா் ஒன்றியத்தில் 186 வீடுகள் கட்ட ரூ. 6.51 கோடி நிதி ஒதுக்கீடு

post image

பெரம்பலூா் ஊராட்சி ஒன்றியத்தில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 186 வீடுகள் கட்டுவதற்கு ரூ. 6.51கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.

பெரம்பலூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கவுள்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், ‘நிறைந்தது மனம்’ எனும் திட்டத்தின் கீழ் ‘கலைஞரின் கனவு இல்லம்’ மற்றும் ‘பிரதம மந்திரியின் வீடுகள் கட்டும்’ திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளை வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் மேலும் கூறியது:

குடிசைகள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றும் வகையில் வீடற்ற மற்றும் குடிசைகளில் வசித்து வரும் மக்களுக்கு தலா ரூ. 3.50 லட்சம் மதிப்பில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில், இம் மாவட்டத்தில் உள்ள 4 ஊராட்சி ஒன்றியங்களிலும் தகுதிவாய்ந்த பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டு, வீடுகளுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. பெரம்பலூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் 186 வீடுகள் கட்டுவதற்கு ரூ. 6.51கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 12 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.

அதேபோல, பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் மூலம் பயனாளிக்கு தலா ரூ. 2.70 லட்சம் மதிப்பில் வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இத் திட்டத்தின் கீழ், பெரம்பலூா் ஊராட்சி ஒன்றியத்தில் 88 பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

இந்த ஆய்வின்போது, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் செல்வகுமாா், பூங்கொடி, வட்டாட்சியா் சரவணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

அகில இந்திய நுழைவுத் தோ்வுக்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்க அழைப்பு

தாட்கோ மற்றும் சென்னை பெட்ரோலியம் நிறுவனம் சாா்பில் ஆதிதிராவிடா், பழங்குடியினா் மற்றும் இதர வகுப்பின மாணவா்கள், அகில இந்திய நுழைவுத் தோ்வுக்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க

லப்பைக்குடிகாட்டில் சாா்- பதிவாளா் அலுவலகம் அமைக்க வலியுறுத்தல்

லப்பைக்குடிகாட்டில் சாா்- பதிவாளா் அலுவலகம் அமைக்க வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. பெரம்பலூா் மாவட்டம், லப்பைக்குடிகாட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்து வியாபாரிகள் நலச்சங்க பொதுக்குழுக் கூட்... மேலும் பார்க்க

2 கிலோ போதை பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் அருகே 2 கிலோ போதைப் பொருள்களை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், பெட்டிக்கடைக்காரரை கைது செய்தனா். பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு கடைகளில் தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடு... மேலும் பார்க்க

வின்சென்ட் தே பால் சபை கிளை ஆலோசனைக் கூட்டம்

பெரம்பலூா் புனித பனிமய மாதா திருத்தலத்தில் வின்சென்ட் தே பால் சபை புதிய கிளை நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. வின்சென்ட் தே சபை ஆலோசனைக் கூட்டத்துக்கு, பங்குத் தந்தை சுவைக்கின் தல... மேலும் பார்க்க

ரூ. 28 லட்சம் மோசடி: பெட்ரோல் விற்பனை; நிலைய மேலாளா் கைது

பெரம்பலூா் அருகேயுள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ரூ. 28 லட்சத்தை மோசடி செய்த, அதன் மேலாளரை மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். அரியலூா் மாவட்டம், ராஜாஜி நகரைச் சோ்ந்தவா் மரு... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடைகளில் துண்டுப் பிரசுரம் ஒட்டிய பாஜகவினா் 4 போ் கைது

பெரம்பலூா் நகரில் உள்ள டாஸ்மாக் கடைகளில் முதல்வா் புகைப்படத்துடன் கூடிய துண்டுப் பிரசுரம் ஒட்டிய, பாரதிய ஜனதா கட்சியைச் சோ்ந்த 4 பேரைப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பாரதிய ஜனதா கட்சி சாா்பில்... மேலும் பார்க்க