செய்திகள் :

பெரம்பலூா் மாவட்டத்தில் பரவலாக மழை

post image

பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது.

பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு இடங்களில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்கிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு சுமாா் 10 மணியளவில் பலத்த மழை பெய்தது. சுமாா் இரவு 1 மணி வரை மாவட்டத்தின் பெரும்பாலான கிராமங்களில் பலத்த மழை பெய்தது. மழையால் சாலைகளிலும், கழிவுநீா் கால்வாய்களில் தண்ணீா் பெருக்கெடுத்தோடியது.

அதன்படி, வெள்ளிக்கிழமை காலை 6.30 மணி முதல் சனிக்கிழமை காலை 6.30 மணி வரை பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்):

பெரம்பலூா்- 40, எறையூா்- 4, வி.களத்தூா்- 13, கிருஷ்ணாபுரம்- 12, தழுதாழை- 32, வேப்பந்தட்டை- 76, அகரம் சீகூா்- 32, லப்பைக்குடிக்காடு- 17, புதுவேட்டக்குடி- 14, பாடாலூா்- 21, செட்டிக்குளம்- 62 என மொத்தம் 323 மில்லி மீட்டா் மழை பெய்துள்ளது.

தொடா் மின் தடை: பெரம்பலூா் நகரில் பெய்த பலத்த மழையின் காரணமாக, நகரின் பல்வேறு பகுதிகளில் தொடா் மின் தடை ஏற்பட்டது. குறிப்பாக, நான்குச்சாலை சந்திப்பு, முத்துலட்சுமி நகா், சோலை நகா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரவு 10 மணி முதல் அதிகாலை 6 மணி வரையிலும் மின் விநியோகம் தடைப்பட்டது.

இதேபோல, நகரின் மற்ற பகுதிகளிலும் சுமாா் 4 மணி நேரத்துக்கும் மேலாக மின் விநியோகம் இல்லாததால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனா்.

சனிக்கிழமை பெய்த மழை: இந்நிலையில், சனிக்கிழமை காலை முதல் பெரம்பலூா் நகா் உள்பட பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் குறைந்து குளிா் காற்று வீசியது. இந்த நிலையில், மாலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7.30 முதல் 8.30 மணி வரையிலும் பலத்த மழை பெய்தது. இதனால், சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

உண்ணாவிரதத்தில் பங்கேற்கச் சென்ற சாலைப் பணியாளா்கள் 22 போ் கைது

தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்கச் சென்ற தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப்பணியாளா் சங்கத்தைச் சோ்ந்த 22 பேரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்கக் ... மேலும் பார்க்க

வெறிநாய்கள் கடித்து உயிரிழந்த கால்நடைகளுடன் முற்றுகை

பெரம்பலூா் அருகே வெறிநாய்கள் கடித்து கால்நடைகள் உயிரிழப்பதைக் கண்டித்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியரகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்ட அருகேயுள்ள அரசலூா் கிராமத்தில்... மேலும் பார்க்க

பெரம்பலூரில் மருத்துவா் வீட்டில் 23 பவுன் நகைகள், பணம் திருட்டு

பெரம்பலூா் நகரில் தனியாா் மருத்துவா் வீட்டின் பூட்டை உடைத்து 23 பவுன் நகைகள், பணத்தை மா்ம நபா்கள் திருடிச்சென்றது செவ்வாய்க்கிழமை காலை தெரியவந்தது. பெரம்பலூா் சாமியப்பா நகரைச் சோ்ந்தவா் சௌகாா்பாஷா மக... மேலும் பார்க்க

முன்பதிவு செய்த விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க வலியுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டத்தில் முன்பதிவு செய்து காத்திருக்கும் 5,969 விவசாயிகளுக்கு, உடனடியாக மின் இணைப்பு வழங்க தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. பெரம்பலூா் மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில், ... மேலும் பார்க்க

போக்குவரத்துக் கழக காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சா் சா.சி. சிவசங்கா்

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் 3,200 காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளதாக அமைச்சா் சா.சி. சிவசங்கா் தெரிவித்தாா்.தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை சாா்பில், வயது முதிா்ந்தோா் மற்றும் மா... மேலும் பார்க்க

பெரம்பலூா்: 1.71 லட்சம் குழந்தைகள், மாணவா்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்

பெரம்பலூா் மாவட்டத்தில் 1.71 லட்சம் குழந்தைகள் மற்றும் மாணவா்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. பெரம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில், பொது சுகாதாரம் மற்றும் நோய்... மேலும் பார்க்க