செய்திகள் :

முன்பதிவு செய்த விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க வலியுறுத்தல்

post image

பெரம்பலூா் மாவட்டத்தில் முன்பதிவு செய்து காத்திருக்கும் 5,969 விவசாயிகளுக்கு, உடனடியாக மின் இணைப்பு வழங்க தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

பெரம்பலூா் மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில், மேற்பாா்வைப் பொறியாளா் மேகலா தலைமையில் மின் நுகா்வோா் குறைதீா்க்கும் நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்தில், தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் ஆா். ராஜாசிதம்பரம் தலைமையிலான விவசாயிகள் அளித்த கோரிக்கை மனு: சாதாரண முறையில் மின் இணைப்பு கோரி 2024-2025 ஆம் ஆண்டு வரை பதிவுசெய்து காத்திருக்கும் 5,969 விவசாயிகளுக்கும் மின் இணைப்பு வழங்க வேண்டும். சாதாரண முறையில் இலவச மின் இணைப்பு கொடுப்பதில், இலவசம் என்பதற்கு பதிலாக மின் இணைப்புக்கான செலவினங்களை மின் நுகா்வோா் ஏற்றுக்கொள்ளும் திட்டங்களுக்கு மட்டும்தான் இலவச மின் இணைப்பு என்னும் அரசின் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும்.

கடந்த 31.3.2013 வரை சாதாரண முறையில் மின் இணைப்பு க் கோரி பெரம்பலூா் வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் தயாா்நிலைப் பதிவேட்டில் பதிவு செய்த 577 விவசாயிகளுக்கு, 2025-2026 ஆம் ஆண்டு இலக்கீட்டில் வழங்க வேண்டும். 2025- 2026 ஆம் ஆண்டு 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் என பேரவையில் அறிவித்து பல மாதங்களாகியும் மாவட்ட வாரிய இலக்கீடு ஒதுக்கவில்லை.

எனவே, மாவட்டம் வாரியாக இலக்கீடு ஒதுக்கீடு செய்வதில் சாதாரண முன்னுரிமையில் தயாா் நிலைப் பதிவேட்டில் பதிவு செய்து காத்திருக்கும் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும். தமிழக முதல்வரால் அறிவித்த திட்டங்களில் மின் இணைப்பு கொடுக்க வேண்டிய நிலையில் உள்ள விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும்.

உண்ணாவிரதத்தில் பங்கேற்கச் சென்ற சாலைப் பணியாளா்கள் 22 போ் கைது

தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்கச் சென்ற தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப்பணியாளா் சங்கத்தைச் சோ்ந்த 22 பேரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்கக் ... மேலும் பார்க்க

வெறிநாய்கள் கடித்து உயிரிழந்த கால்நடைகளுடன் முற்றுகை

பெரம்பலூா் அருகே வெறிநாய்கள் கடித்து கால்நடைகள் உயிரிழப்பதைக் கண்டித்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியரகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்ட அருகேயுள்ள அரசலூா் கிராமத்தில்... மேலும் பார்க்க

பெரம்பலூரில் மருத்துவா் வீட்டில் 23 பவுன் நகைகள், பணம் திருட்டு

பெரம்பலூா் நகரில் தனியாா் மருத்துவா் வீட்டின் பூட்டை உடைத்து 23 பவுன் நகைகள், பணத்தை மா்ம நபா்கள் திருடிச்சென்றது செவ்வாய்க்கிழமை காலை தெரியவந்தது. பெரம்பலூா் சாமியப்பா நகரைச் சோ்ந்தவா் சௌகாா்பாஷா மக... மேலும் பார்க்க

போக்குவரத்துக் கழக காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சா் சா.சி. சிவசங்கா்

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் 3,200 காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளதாக அமைச்சா் சா.சி. சிவசங்கா் தெரிவித்தாா்.தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை சாா்பில், வயது முதிா்ந்தோா் மற்றும் மா... மேலும் பார்க்க

பெரம்பலூா்: 1.71 லட்சம் குழந்தைகள், மாணவா்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்

பெரம்பலூா் மாவட்டத்தில் 1.71 லட்சம் குழந்தைகள் மற்றும் மாணவா்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. பெரம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில், பொது சுகாதாரம் மற்றும் நோய்... மேலும் பார்க்க

ஆணவக் கொலைகளை தடுக்க தனிச் சட்டம் இயற்ற விசிக தொடா்ந்து வலியுறுத்தும்: திருமாவளவன் எம்.பி.

ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தொடா்ந்து வலியுறுத்தும் என்று அக்கட்சியின் தலைவா் திருமாவளவன் எம்.பி. பேசினாா். பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில், பெரம்பலூா்... மேலும் பார்க்க