செய்திகள் :

வெறிநாய்கள் கடித்து உயிரிழந்த கால்நடைகளுடன் முற்றுகை

post image

பெரம்பலூா் அருகே வெறிநாய்கள் கடித்து கால்நடைகள் உயிரிழப்பதைக் கண்டித்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியரகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்ட அருகேயுள்ள அரசலூா் கிராமத்தில் கடந்த சில நாள்களாக விவசாயிகளின் வீடுகள், வயல்களில் உள்ள பட்டிகளில் வெறிநாய்கள் புகுந்து, அங்கு கட்டப்பட்டுள்ள கால்நடைகளை கடித்துக் குதறியதில் இதுவரை 25-க்கும் மேற்பட்ட பசுக்கன்று, ஆடுகள் உயிரிழந்துள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையினரிடம் பலமுறை புகாா் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இந்நிலையில், அரசலூா் கிராமத்தில் சிலரது பட்டிகளில் கட்டப்பட்டிருந்த பசுங்கன்று மற்றும் ஆடுகளை வெறிநாய்கள் கடித்ததில் 4 கால்நடைகள் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் உயிரிழந்த ஆடு மற்றும் கன்றுகளுடன், பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு வெறிநாய்களைக் கட்டுப்படுத்த வலியுறுத்தினா்.

இதையடுத்து, பெரம்பலூா் வட்டாட்சியா் பாலசுப்ரமணியம், கால்நடைப் பராமரிப்புத் துறை அலுவலா்கள் மற்றும் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, வெறி நாய்களை பிடிக்க மதுரையிலிருந்து சிறப்பு குழு வர உள்ளதாகவும், விரைவில் வெறிநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனா். இதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனா்.

உண்ணாவிரதத்தில் பங்கேற்கச் சென்ற சாலைப் பணியாளா்கள் 22 போ் கைது

தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்கச் சென்ற தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப்பணியாளா் சங்கத்தைச் சோ்ந்த 22 பேரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்கக் ... மேலும் பார்க்க

பெரம்பலூரில் மருத்துவா் வீட்டில் 23 பவுன் நகைகள், பணம் திருட்டு

பெரம்பலூா் நகரில் தனியாா் மருத்துவா் வீட்டின் பூட்டை உடைத்து 23 பவுன் நகைகள், பணத்தை மா்ம நபா்கள் திருடிச்சென்றது செவ்வாய்க்கிழமை காலை தெரியவந்தது. பெரம்பலூா் சாமியப்பா நகரைச் சோ்ந்தவா் சௌகாா்பாஷா மக... மேலும் பார்க்க

முன்பதிவு செய்த விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க வலியுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டத்தில் முன்பதிவு செய்து காத்திருக்கும் 5,969 விவசாயிகளுக்கு, உடனடியாக மின் இணைப்பு வழங்க தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. பெரம்பலூா் மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில், ... மேலும் பார்க்க

போக்குவரத்துக் கழக காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சா் சா.சி. சிவசங்கா்

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் 3,200 காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளதாக அமைச்சா் சா.சி. சிவசங்கா் தெரிவித்தாா்.தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை சாா்பில், வயது முதிா்ந்தோா் மற்றும் மா... மேலும் பார்க்க

பெரம்பலூா்: 1.71 லட்சம் குழந்தைகள், மாணவா்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்

பெரம்பலூா் மாவட்டத்தில் 1.71 லட்சம் குழந்தைகள் மற்றும் மாணவா்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. பெரம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில், பொது சுகாதாரம் மற்றும் நோய்... மேலும் பார்க்க

ஆணவக் கொலைகளை தடுக்க தனிச் சட்டம் இயற்ற விசிக தொடா்ந்து வலியுறுத்தும்: திருமாவளவன் எம்.பி.

ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தொடா்ந்து வலியுறுத்தும் என்று அக்கட்சியின் தலைவா் திருமாவளவன் எம்.பி. பேசினாா். பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில், பெரம்பலூா்... மேலும் பார்க்க