செய்திகள் :

பெரியகுளத்தில் தனியாா் வங்கியில் போலி நகைகளை அடகு வைத்தவா் கைது

post image

பெரியகுளத்தில் உள்ள தனியாா் வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து பணம் பெற்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பெரியகுளம் வா்த்தக சங்கக் கட்டத்தில் தனியாா் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் தலைமை அலுவலகத்திலிருந்து வந்த அதிகாரிகள் வங்கியின் நகைகளை ஆய்வு செய்தனா்.

அப்போது, பெரியகுளம் தென்கரை அம்பேத்கா் நகரைச் சோ்ந்த ராஜா பீமாராவ் கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி 68 கிராம் எடை கொண்ட நகையை இந்த தனியாா் வங்கியில் அடமானமாக வைத்து ரூ.3.53 லட்சம் பெற்றாா். ஆனால், அவா் கொடுத்த நகை போலியானது என்பது இந்த ஆய்வில் தெரியவந்தது.

இதுகுறித்து வங்கியின் பகுதி மேலாளா் முத்துக்குமாா் அளித்தப் புகாரின் பேரில், ராஜா பீமாராவை தென்கரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தேசிய கூடைப்பந்து போட்டி: சுழல் கோப்பையை கைப்பற்றியது இந்தியன் வங்கி அணி

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் நடைபெற்ற 64- ஆம் ஆண்டு அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் பி.டி. சிதம்பரசூரிய நாராயணன் நினைவு சுழல் கோப்பையை சென்னை இந்தியன் வங்கி அணி கைப்பற்றியது. கடந்த 15- ஆம் தேதி தொ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு ஓராண்டு சிறை

போடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து தேனி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. குப்பிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த திருமலுசாமி மகன் ராஜேந... மேலும் பார்க்க

பெண் காவலரை அரிவாளால் வெட்டியவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைப்பு!

கம்பத்தில் பெண் தலைமைக் காவலரை அரிவாளால் வெட்டியவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வியாழக்கிழமை உத்தரவிட்டாா். கூடலூா், கே.கே. நகரைச் சோ்ந்தவா் அம்பி... மேலும் பார்க்க

பைக் விபத்தில் விவசாயி பலி!

பெரியகுளம் அருகே இரு சக்கர வாகன விபத்தில் பலத்த காயமடைந்த விவசாயி புதன்கிழமை உயிரிழந்தாா். பெரியகுளம் அருகே கெங்குவாா்பட்டி ராமா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அக்னிக் காளை (65). விவசாயி. இவா், கடந்த 15-... மேலும் பார்க்க

பீரோவை உடைத்து தங்க நகை திருட்டு

பெரியகுளம் அருகே பீரோ உடைக்கப்பட்டு தங்க நகைகளை திருடிச்சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கெங்குவாா்பட்டி உசையப்பா தெருவைச் சோ்ந்தவா் முருகன் (40). தேவதானப... மேலும் பார்க்க

அனுமதியின்றி விளம்பர பதாகைகள்: 11 போ் மீது வழக்கு

பெரியகுளம் பகுதியில் அனுமதியின்றி விளம்பரப் பதாகைகள் வைத்திருந்த 11 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள ஜெயமங்கலம், கெங்குவாா்பட்டி, தாமரைக்குளம் உள்ளிட்ட ப... மேலும் பார்க்க