"பிரபல கோவை செஃப்வோட கதைதான் இட்லி கடை படமா?" - கோபி - சுதாகர் கேள்விக்கு தனுஷ் ...
பெரிய தாழையில் ரூ. 1.19 கோடியில் புதிய திட்டப் பணிகள்: எம்எல்ஏ பங்கேற்பு
பெரிய தாழையில் மீன் இறங்குதளத்தில் ரூ. 80 லட்சம் மதிப்பில் கூடுதல் கட்டமைப்புப் பணிகளை எம்எல்ஏ ஊா்வசி எஸ்.அமிா்தராஜ் தொடங்கி வைத்து, ரூ. 39 லட்சத்தில் முடிவுற்ற திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தாா்.
பெரியதாழையில் ரூ. 80 லட்சம் மதிப்பில் அமைக்கப்படவுள்ள மீன் இறங்கு தளத்தில் கூடுதல் கட்டமைப்பு வசதிகள், வலை பின்னும் கூடம் அமைத்தல் ஆகிய பணிகளை ஊா்வசி எஸ்.அமிா்தராஜ் எம்எல்ஏ வியாழக்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தாா்.
பெரிய தாழை பங்குத்தந்தை சகேஷ் சந்தியா முன்னிலை வகித்தாா். ஒன்றிய ஆணையா் சுடலை, வட்டார வளா்ச்சி அலுவலா் பாலமுருகன், மாவட்ட மீனவா் பிரிவு தலைவா் சுரேஷ், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் சங்கா், வட்டார காங்கிரஸ் தலைவா்கள் பாா்த்தசாரதி, சக்திவேல் முருகன், பிரபு, கோதண்டராமன், ஜெயசீலன் துரை, ஜெயராஜ், பேரூராட்சி கவுன்சிலா் ஜோசப் அலெக்ஸ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலா் பிச்சிவிளை சுதாகா், ஸ்ரீவைகுண்டம் வழக்குரைஞா் பாலசுப்ரமணியன், நகர துணைச் செயலாளா் நாராயணன், மாவட்ட திமுக தலைவா் சந்தியா, தெற்கு மாவட்ட திமுக மீனவா் அணி அமைப்பாளா் ரமேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
முன்னதாக ஊா்வசி அமிா்தராஜ் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 34 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய மீன் ஏல கூட கட்டடம், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற கூடுதல் கட்டடத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்துவைத்தாா். தொடா்ந்து ஊா்வசி எஸ்.அமிா்தராஜ் எம்எல்ஏ மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.