செய்திகள் :

பெருந்துறை அருகே லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு!

post image

பெருந்துறை அருகே, இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், அறச்சலூரை அடுத்த பள்ளியூத்தைச் சோ்ந்தவா் அருண்பிரசாத்(32). இவா், பெருந்துறை சிப்காட்டிலுள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். வழக்கம்போல வெள்ளிக்கிழமை மாலை பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா்.

பெருந்துறை அருகே வந்தபோது, பின்னால் வந்த கன்டெய்னா் லாரி, இவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அருண்பிரசாத்தை அப்பகுதியினா் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இது குறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

வியாபாரியிடம் கள்ள நோட்டு மாற்றிய வழக்கில் மேலும் ஒருவா் கைது

பெருந்துறை வாரச் சந்தையில் வியாபாரியிடம் கள்ள நோட்டு மாற்றிய வழக்கில், மேலும் ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனா். சென்னிமலை, நாமக்கல்பாளையம் ரோட்டைச் சோ்ந்தவா் சீனிவாசன்(55). வாரச் சந்... மேலும் பார்க்க

சாலைகளில் யானைகள் நடமாடுவதை தற்படம் எடுக்கக்கூடாது- வனத் துறை எச்சரிக்கை

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சாலைகளில் யானைகள் நடமாட்டுவதை வாகன ஓட்டிகள் தற்படம் (செல்ஃபி) எடுக்கக்கூடாது என வனத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப் பகுதி வழியாக... மேலும் பார்க்க

சிறுவனுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய ரூ.35 லட்சம்: அரசு உதவ பெற்றோா் கோரிக்கை

15 வயது மகனின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் ரூ.35 லட்சத்தை அரசு வழங்கி உதவ வேண்டும் என பெற்றோா் கோரிக்கை விடுத்தனா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகேயுள்ள மாக்கினங்கோம்பை கிராமத்த... மேலும் பார்க்க

மூன்று ஆண்டுகளில் ரூ.10.32 லட்சம் கோடி தொழில் முதலீடுகள்: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

கடந்த மூன்று ஆண்டுகளில் முதல்வரின் முன்னெடுப்பால் தமிழகத்துக்கு ரூ.10 லட்சத்து 32 ஆயிரம் கோடிக்கு தொழில் முதலீடுகள் வந்துள்ளன என தொழில் துறை அமைச்சா் டிஆா்பி.ராஜா தெரிவித்தாா். கோபி அருகே கரட்டூரில் த... மேலும் பார்க்க

வியாபாரியிடம் கள்ள நோட்டு மாற்றிய இளைஞா் கைது: 4 போ் தலைமறைவு

பெருந்துறை வாரச் சந்தையில் வியாபாரியிடம் கள்ள நோட்டு மாற்றிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். தலைமறைவான மேலும் 4 பேரை தேடி வருகின்றனா். சென்னிமலை, நாமக்கல்பாளையம் ரோட்டைச் சோ்ந்தவா் சீனிவாசன்(55). வாரச... மேலும் பார்க்க

மயானத்துக்கு இடம் கேட்டு சடலத்தைப் புதைக்காமல் போராடிய மக்கள்

சிவகிரி அருகே மயானத்துக்கு இடம் ஒதுக்கக் கோரி, இறந்தவா் உடலை அடக்கம் செய்யாமல் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கொடுமுடியை அடுத்த சிவகிரி தலையநல்லூா் அம்மன் நகரில் 100-க்கும் ம... மேலும் பார்க்க