செய்திகள் :

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

post image

பொதுத்துறை நிறுவனமான என்டிபிசி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள உதவி கெமிஸ்ட் டிரெய்னி பணிகளுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண். 09/25

பணி: Assistant Chemist Trainee(ACT)

காலியிடங்கள்: 30

சம்பளம்: மாதம் ரூ. 30,000 - 1,20,000

தகுதி: வேதியியல் பாடத்தில் முதல் வகுப்பில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும். அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.

மாதம் ரூ. 2 லட்சம் சம்பளத்தில் நபார்டு வங்கியில் வேலை வேண்டுமா..?

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு பெறுவோர் சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைக்கப்படும்போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.30,000 உதவித்தொகையுடன் ஒரு ஆண்டு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு நிரந்தரமாக பணியமர்த்தப்படுவர்.

நிரந்தர பணிக்கு தேர்வு செய்யப்படும்போது பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.1 லட்சத்துக்கான பணி உத்திரவாத பத்திரமும், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.50,000-க்கான பணி உத்தரவாத பத்திரமும் சமர்ப்பிக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம், நாள் போன்ற விவரங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றத்திறனாளி பிரிவினரைத் தவிர, இதர அனைத்து பிரிவினரும் ரூ.300 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.ntpc.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 31.5.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் வேலை வேண்டுமா? : உடனே விண்ணப்பிக்கவும்!

மின் உற்பத்தி நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் பணி: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

மத்திய மின்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான வடகிழக்கு மின் உற்பத்தி கழகத்தில்(NEEPCO) நிரப்பப்பட உள்ள எக்ஸிகியூட்டிவ் டிரெய்னி பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்... மேலும் பார்க்க

ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் தொழில் பழகுநர் பயிற்சி: விண்ணப்பிப்பது எப்படி?

பொதுத் துறையைச் சேர்ந்த ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு(அப்ரண்டீஸ்) பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐ முடித்தவர்களிடம் இருந்து 2 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்ற... மேலும் பார்க்க

விண்ணப்பித்துவிட்டீர்களா..? விமானப் படையில் குரூப் 'சி' பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்திய விமானப் படையில் காலியாக உள்ள 153 குரூப் 'சி' பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இந்திய இளைஞர்களிடம் இருந்து வரும் 15 ஆம் தேதிக்கு... மேலும் பார்க்க

பொதுத்துறை வங்கியில் வேலை வேண்டுமா..?: காலியிடங்கள் 400!

தமிழ்நாட்டின் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இந்தியா முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் செயல்பட்டு வரும் முன்னணி பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உள்ளூர் வங்கி அலுவலர் காலியிடங்களுக்கான அ... மேலும் பார்க்க

விண்ணப்பித்துவிட்டீர்களா..? மருத்துவ-நறுமண தாவர நிறுவன வேலைக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி!

மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் லக்னௌவில் செயல்பட்டு வரும் மத்திய மருத்துவ மற்றும் நறுமண தாவர ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள இளநிலை செயலக உதவியாளர் பணியிடங்களுக்கு தகுத... மேலும் பார்க்க

மாதம் ரூ. 2 லட்சம் சம்பளத்தில் நபார்டு வங்கியில் வேலை வேண்டுமா..?

தேசிய விவசாய மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில்(நபார்டு) காலியாக உள்ள ஸ்பெஷலிஸ்ட் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற... மேலும் பார்க்க