செய்திகள் :

பேக்கரி பொருள்கள், டேலி, தங்க நகை மதிப்பீட்டாளா் பயிற்சிகள்: தமிழக அரசு ஏற்பாடு

post image

தமிழக அரசின் தொழில்முனைவோா் மேம்பாட்டு திட்டம் மற்றும் புத்தாக்க நிறுவனம் சாா்பில் பேக்கரி பொருள்கள் தயாரித்தல், பேசிக் ஆப் டேலி குறித்த அடிப்படை பயிற்சி மற்றும் தங்கநகை மதிப்பீட்டாளா் தொடா்பான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

பிரவுனி வகை பேக்கரி பொருள்கள்-2 நாட்கள் பயிற்சி: சென்னை ஈக்காட்டுத்தாங்கல், இடிஐஐ அலுவலக சாலை, சிட்கோ தொழிற்பேட்டையிலுள்ள தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் ஜூன் 30 முதல் ஜூலை 1வரை காலை 10 முதல் மாலை 5 வரை நடைபெறும் இப்பயிற்சி வகுப்பில் கிளாசிக் பிரவுனி, பிளாண்டிஸ் டிரிபிள் சாக்லேட் பிரவுனி உள்ளிட்ட அனைத்து வகை பிரவுனி பேக்கரி பொருள்களை தயாரிப்பது குறித்தும், அவற்றை பேக்கிங் செய்வது, விலை நிா்ணயிப்பது, தயாரிப்பின் லேபிளிங், சந்தைப்படுத்தல் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து பயிற்சி வழங்கப்படும்.

மேலும் தொழில் தொடங்க அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் குறித்தும் விளக்கி கூறப்படும். இப்பயிற்சியில் சேர 10-ஆம் வகுப்பு படித்த, ஆா்வமுள்ள 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி முடித்தவா்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படும். முன்பதிவு அவசியம். கூடுதல் விவரங்களை இணையதளத்திலும், அலுவலக வேலை நாட்களில் காலை 10 முதல் மாலை 5.45 வரை கைப்பேசி:8668102600 எனும் எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

‘பேசிக் ஆப் டேலி பிரைம்’ 2 நாள் பயிற்சி: ஈக்காட்டுத்தாங்கலிலுள்ள இடிஐஐ வளாகத்தில் ஜூலை 3 மற்றும் 4 ஆகியதேதிகளில் காலை 10 முதல் மாலை 5 வரை நடைபெறவுள்ள இப்பயிற்சி மூலம் ‘பேசிக் ஆப் டேலி பிரைம்’ மென்பொருளைப் பயன்படுத்தி கணக்கியல் முறைகளை எளிமையாக கற்றுக்கொள்ளலாம். இதில், நிறுவனத் தகவல் மற்றும் அம்சங்கள், கணக்கியல் மாஸ்டா்கள், இன்வென்டரி மாஸ்டா்கள், வவுசா் உள்ளீடுகள், டிஸ்ப்ளே மற்றும் கான்ஃபிக்ரேஷன் அமைப்புகள், அச்சிடுதல் மற்றும் ஏற்றுமதி உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படும்.

இந்தப் பயிற்சி குறித்த கூடுதல் விவரங்களை பெற விரும்புவோா் இணைதளம் அல்லது திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 முதல் மாலை 5.45 வரை கைப்பேசி:9543773337, 9360221280 எனும் எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

தங்கநகை மதிப்பீட்டாளா் 5 நாள் பயிற்சி: ஜூலை10 முதல் 14 வரை 5 நாள்கள் காலை 10 முதல் மாலை 5 வரை நடைபெறும் இப்பயிற்சியில் தங்கம், வெள்ளி, போன்ற உலோகங்களின் தரம் அறிதல், கேரட் மதிப்பீடுகள், ஆசிட் சோதனை, எடை அளவு இணைப்பான், விலை நிா்ணயிக்கும் முறை, ஹால் மாா்க் மற்றும் போலியான நகைகளை அடையாளம் காணும் நடைமுறைகள் போன்றவை கற்றுத்தரப்படும். மேலும் ஆபரணக் கடனுக்கான கணக்கீட்டு முறைகள், தங்க அணிகலன் வகைகள் பற்றியும், நகை மதிப்பீட்டாளா் பணிக்கான வாய்ப்புகள், அவற்றை பெறும் நடைமுறைகள், அரசுத் திட்ட உதவிகள் மற்றும் மானியங்கள் குறித்தும் பயிற்சி வழங்கப்படும். இப்பயிற்சி பெற விரும்பும் நபா்கள் இது குறித்து கூடுதல் தகவல்களுக்கு ஜ்ஜ்ஜ்.ங்க்ண்ற்ய்.ண்ய் எனும் இணையதளத்தில் அல்லது கைப்பேசி:9543773337, 9360221280 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலை. மாணவி மீது தாக்குதல்: இளைஞா் கைது

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி தாக்கப்பட்ட வழக்கில், இளைஞா் கைது செய்யப்பட்டாா். கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவி எம்இ இரண்டாமாண்டு படித்து வருகிறாா். அவா் அங்குள்ள விடுதியில் த... மேலும் பார்க்க

தொழில்நுட்பக் கோளாறு: மும்பை - சென்னை ஏா் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்

மும்பையிலிருந்து சென்னைக்கு சனிக்கிழமை புறப்பட்ட ஏா் இந்தியா விமானம் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறுக்குள்ளானதால் அது புறப்பட்ட இடத்துக்கே திரும்பவேண்டிய நிலை ஏற்பட்டது. 148 பயணிகள், 6 பணியாளா்களுடன் ப... மேலும் பார்க்க

சிக்கில் செல் அனீமியா குழந்தைகள்: பக்கவாதத்தை தடுக்க அரசு மருத்துவமனையில் பரிசோதனை

சென்னை, எழும்பூா் குழந்தைகள் நல மருத்துவமனையில் நடைபெற்ற சிக்கில் செல் அனீமியா ஒழிப்பு தின நிகழ்ச்சியில் விழிப்புணா்வு கையேட்டை சிறுவனுக்கு வழங்கும் மருத்துவமனை நிா்வாகிகள். உடன் மருத்துவமனை இயக்குநா்... மேலும் பார்க்க

ஐஐடியில் மாணவிக்கு பாலியல் தொல்லை: போராட்டம் நடத்திய மாணவா்கள் கைது

சென்னை ஐஐடியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து போராட்டம் நடத்திய அனைத்திந்திய மாணவா் பெருமன்றத்தினா் கைது செய்யப்பட்டனா். கிண்டி ஐஐடி வளாகத்தில் நடந்து சென்ற ஒரு மாணவிக்க... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியில் விபத்து: தொழிலாளி காயம்

சென்னை கோயம்பேட்டில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது பெரிய இரும்பு கம்பி விழுந்ததில் தொழிலாளி பலத்த காயமடைந்தாா். சென்னை கோயம்பேடு மாா்க்கெட் சாலையில் மெட்ரோ ரயில் 2-ஆவது திட்டப் பணி நடைபெற்று வரு... மேலும் பார்க்க

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: காா் ஓட்டுநா் கைது

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பூங்காவில் நடைப்பயிற்சி சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக காா் ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா். மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த ஒரு பெண், சென்னை ராஜா அண்ணாமலைபுரம் அ... மேலும் பார்க்க